மணிரத்னத்தை கேட்டே மாதவன் இதை செய்வார்… அலைபாயுதே வெற்றியின் ரகசியம் இதானோ!
Mar 18, 2024, 15:00 IST
Madhavan: நடிகர் மாதவன் முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து மணிரத்னத்திடன் இந்த விஷயத்தினை கேட்டே செய்வாராம். அதனால் அவர் செய்ய வேண்டிய ஒரு படத்தினையே மாற்றி வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. கௌதம் வாசுதேவ் மேனன் முதன்முதலில் காக்க காக்க படத்தினை இயக்குவதாக இருந்ததாம். அந்த சமயத்தில் மாதவனை சந்திக்கிறார். அவர் கௌதம் மேனனிடம் எதுவும் கதை இருக்கா? பண்ணலாமா எனக் கேட்டாராம். அப்போ அவரிடம் இருந்த மின்னலே கதையை சொன்னாராம். அது மாதவனுக்கும் பிடித்துவிட்டதாம். இதையும் படிங்க: கூச்சப்பட்ட நடிகை!. சம்பளத்தை கொடுத்து விரட்டிவிட்ட இயக்குனர்!.. காதலிக்க நேரமில்லை அப்டேட்!..
ஆனால், இந்த கதையை மணிரத்னத்திடம் சொல்ல வேண்டும் எனக் கேட்டு கொண்டாராம் மாதவன். அது தன்னுடைய முதல் பட வெற்றியால் அமைந்தது எனவும் கூறப்படுகிறது. அந்த சமயத்தில் மாதவன் என்ன படம் செய்தாலும் அது மணிரத்னம் சொல்லும்படியாக தான் இருக்குமாம். ஏனெனில் ஒரு நேரத்தில் மாதவனுக்கு என்னவளே, மின்னலே ஆகிய பட வாய்ப்புகள் வந்தது. இதையும் படிங்க: காலையில் ஐடி ஆபிஸ்.. மாலையில் டைரக்டர் வாசல்… கௌதம் வாசுதேவ் மேனனின் ஆரம்பகாலம் இவ்வளோ மோசமா?
ஆனால் முதலில் மின்னலே இரண்டு நண்பர்களின் கதையாக தான் இருந்தது. மாதவனிடம் பேச பேச நண்பர்கள், வில்லன்களாகி கதையின் மாற்றமே மாறியதாம். அதை தொடர்ந்து, மொத்த படக்குழுவையுமே மாதவனால் தான் அமைக்க முடிந்தது. தயாரிப்பாளரை கௌதம் மேனனுக்கு அறிமுகம் செய்து வைத்தாராம்.
இரண்டு கதைகளையும் கேட்ட மணிரத்னம் தான் முதலில் என்னவளே படத்தினை பண்ணச் சொல்லி இருக்கிறார். அதனால் தான் மின்னலே முன்னர் என்னவளே ரிலீஸ் ஆனது. ஷூட்டிங் முடிந்தும் படத்தின் ப்ரிவியூ ஷோக்களை வந்து மணிரத்னம் பார்த்து கரெக்ஷன் சொல்லும் பழக்கத்தினையும் வைத்து இருந்தாராம்.
