Connect with us

Cinema News

என் படத்துல 2 படம்தான் நல்லப்படம்!. வாயை விட்ட நடிகை நதியா.. என்ன மேடம் இப்படி சொல்லிட்டிங்க!..

தமிழில் கதாநாயகியாக இருக்கும் நடிகைகள் வெகு நாட்கள் நடிகைகளாக இருப்பதை விடவும், ஒரு டீசண்டான நடிகையாக இருப்பது மிகவும் கடினமான காரியமாகும்.

எந்த கவர்ச்சி காட்சிகளும் இல்லாமல் மக்கள் மத்தியில் தொடர்ந்து நேர்த்தியான உடையுடன் நடிக்கும் நடிகைகள் சிலர் உண்டு அதில் நடிகை நதியா முக்கியமானவர்.

nathiya

nathiya

இதையும் படிங்க:அப்போ தேவைப்படல! இப்போ மட்டும் தேவைப்படுதா? பயில்வானின் கேள்வியால் பயங்கர அப்செட்டில் ஹன்சிகா

சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் நதியா தொடர்ந்து கவர்ச்சி எதுவும் காட்டாத ஒரு கதாநாயகியாகவே வலம் வந்தார். மக்களும் அதை ஏற்றுக் கொண்டனர். முக்கியமாக வயதான பிறகும் இளமையாகவே இருந்த அவரது தோற்றம் ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தின.

நதியா அளித்த பதில்:

இதனாலையே சினிமாவிற்கு நதியா ரீ எண்ட்ரி கொடுத்தப்போது அவருக்கு அதிக ஆதரவு இருந்தது. அவர் நடித்த திரைப்படங்களில் தாமிரபரணி எம் குமரன், ராஜாதி ராஜா போன்ற திரைப்படங்கள் முக்கியமானவை. ஒரு பேட்டியில் அவரிடம் கேட்கும் பொழுது நீங்கள் நடித்த திரைப்படத்திலேயே சிறந்த படம் எனக் கேட்டால் எதை கூறுவீர்கள் என கேட்கப்பட்டது.

m kumaran

m kumaran

இதையும் படிங்க:போற போக்குல வாய்ப்பு கிடைக்கும் போல..கல்யாணத்துக்கு வந்த பொண்ணுக்கு எம்.ஜி.ஆர் படத்தில் கிடைத்த வாய்ப்பு!..

அதற்கு நதியா பதில் அளிக்கும் போது நான் நடித்த திரைப்படங்களில் சிறந்த படம் என இரண்டு படங்களை கூறுவேன். அதில் ஒன்று எனது முதல் திரைப்படமான பூவே பூச்சூடவா. இரண்டாவது திரைப்படம் ஜெயம் ரவியுடன் நடித்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி.

ஏனெனில் சினிமாவில் இவ்வளவு படங்கள் நடித்து இருக்கும் பொழுதும் அந்த இரண்டு படங்களை வைத்துதான்என்னை அடையாளம் காண்கின்றனர் மக்கள் என கூறியுள்ளார் நதியா.

இதையும் படிங்க:கமல் படத்துக்கு செம மேட்டரை கையிலெடுக்கும் ஹெச்.வினோத்!.. அட இதுவரை யாரும் தொடலயே!..

author avatar
Rajkumar
Continue Reading

More in Cinema News

To Top