">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
வெங்கட்பிரபு மீது செம கடுப்பில் பிரேம்ஜி… அந்த ஹீரோயின்தான் காரணமாம்!
வெங்கட்பிரபு மீது செம கடுப்பில் பிரேம்ஜி… அந்த ஹீரோயின்தான் காரணமாம்!
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க துவங்கிய திரைப்படம் மாநாடு. ஆனால், சிம்புவுடன் பஞ்சாயத்து, கொரோனா ஊரடங்கு என கடந்த 10 மாதங்களாக படப்பிடிப்பு தள்ளிப்போனது.
ஆனால், ஈஸ்வரன் படத்தை வேகமாக முடித்துக்கொடுத்துவிட்டு மாநாடு படத்திற்கு சென்றுவிட்டார் சிம்பு. எனவே, மாநாடு படத்தின் படப்பிடிப்பு வேகம் பிடித்துள்ளது.
இந்நிலையில், மாநாடு பற்றிய முக்கிய அப்டேட் நாளை காலை 9:9 மணிக்கு வெளியாகும் என அப்படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு டிவிட் செய்துள்ளார். அநேகமாக ‘மாநாடு’ படத்தில் ஃபர்ஸ்ட் லுக் தொடர்பான செய்தியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த டிவிட்டில் சிம்பு, சுரேஷ் காமாட்சி, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, என பலரின் டிவிட்டர் ஐடியையும் டேக் செய்திருந்தார்.
இதைத்தொடர்ந்து மாநாடு படத்தின் கதாநாயகி கல்யாணி பிரியணின் டிவிட்டர் ஐடியை ஏன் டேக் செய்யவில்லை என கோபத்துடன் வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி டிவிட் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த வெங்கட்பிரபு ‘ என் தவறுதான்’ என பதில் கூறியிருந்தார்.
பார்ப்பதற்கு பிரேம்ஜி கோபப்பட்டது போல் தெரிந்தாலும், இது அண்ணன், தம்பிகளுக்கு இடையே ஒரு விளையாட்டு மட்டுமே என்பதை நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
How dare you missed @kalyanipriyan https://t.co/y4CdAQsGY3
— PREMGI (@Premgiamaren) November 18, 2020