Categories: latest news Review

மாரீசன்: இடைவேளை வரைக்கும் பார்த்தது வேஸ்டா? புளூசட்டைமாறன் இப்படி கலாய்க்கிறாரே!

பகத்பாசில், வடிவேலு நடித்த மாரீசன் படம் நேற்று வெளியானது. படம் எப்படி இருக்கு என புளூசட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார். வாங்க பார்க்கலாம்.

படத்தோட ஆரம்பத்துல பகத்பாசில் ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆகி ஒரு வீட்டுல திருடுறாரு. அங்கே வடிவேலுவை சங்கிலி போட்டு கட்டி வச்சிருக்காங்க. அல்சைமர் நோய் இருக்குறதால வெளியே போனா வீட்டுக்குத் திரும்பி வர மறந்துடுவாராம். அதனால அப்படி கட்டிப்போட்டுருக்காங்க.

அவரு பகத்பாசில பார்த்த உடனே எப்படியாவது என்னைக் காப்பாத்து. உனக்கு 25 ஆயிரம் ரூபாய் பணம் ஏடிஎம்ல எடுத்துத் தாரேன்னு சொல்றாரு. அதை ஒத்துக்கிட்டு பகத்பாசில் காப்பாத்துறாரு. அங்கே போனதும் தான் வடிவேலுக்கிட்ட நிறைய பணம் இருக்குறது தெரியுது. அதை எப்படியாவது ஆட்டையைப் போடணும்னு நினைக்கிறாரு. அப்புறம் அவரு கூடவே டிராவல் பண்றாரு. பணத்தை ஆட்டையைப் போட்டாராங்கறது தான் கதை.

படத்துல 20 நிமிஷத்துல கதையை சொல்ல ஆரம்பிச்சிடணும். ஆனா இந்தப் படத்துல இடைவேளை வரைக்குமே லீடு தான் கொடுத்துருக்காங்க. அதுக்கு அப்புறம் தான் படத்தையே ஆரம்பிக்கிறாங்க. அதுவரைக்கும் படம் பார்த்தது வேஸ்ட் தான். ஆனா இடைவேளை வரைக்குமே நல்லா தான் எடுத்துருந்தாங்க. இடைவேளைக்கு அப்புறம் ஒரு பிளாஷ்பேக் வருது. அதுக்கு அப்புறம் மையக் கேரக்டர் ஒரு நடவடிக்கையில இறங்குறாரு. அது கனெக்ட் ஆகல. அவரோட ஆத்திரம் நமக்கு ஒட்டல.

படத்துல பகத்பாசில் பிரமாதமா நடிச்சிருக்காரு. வடிவேலுவும் நல்லா நடிச்சிருக்காரு. கேரக்டருக்கு பொருந்திருக்காரு. கோவை சரளா, விவேக் பிரசன்னா ராங்கான கேரக்டர். வடிவேலு, பகத்பாசில் கேரக்டரைத் தவிர வேற எந்தக் கேரக்டருமே சரியா வடிவமைக்கல. படத்தோட லென்த்தைக் குறைச்சி கொஞ்சம் பட்டி டிங்கரிங் எல்லாம் பார்த்துருந்தாங்கன்னா ரொம்ப சூப்பரான படமா வந்துருக்கும். இது சுமாரான படமா வந்துருக்கு என்கிறார் புளூசட்டைமாறன்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v