Connect with us

Cinema News

மீண்டும் மீண்டும் ரசிகர்களை ஏமாற்றும் சூர்யா.! இதெல்லாம் நியாயமே இல்லைங்க சார்.!

தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் ஏங்கி தவிக்கும் ரசிகர்கள் என்றால் அது சூர்யா ரசிகர்கள் தான். நல்ல தரமான படங்களை எடுத்து அதனை தியேட்டரில் கொடுக்காமல் OTTயில் நேரடியாக வெளியிட்டு தியேட்டர் கொண்டாடத்தை தடுத்து விடுகிறார் சூர்யா.

suriya

அப்படிதான் சூரரை போற்று, மற்றும் ஜெய் பீம் படம் ரசிகர்களை ஏமாற்றிவிட்டு தியேட்டரில் வெளியாகாமல், OTTயில் நேரடியாக வெளியிடப்பட்டு விட்டது. இந்த இரண்டு படங்களும் தியேட்டரில் வெளியாகி இருந்திருந்தால், இந்நேரம் சூர்யாவின் மார்க்கெட் தற்போது விட அதிகமாக இருந்திருக்கும்.

suriya

இருந்தாலும் எதற்கும் துணிந்தவன் எனும் மாஸ் கமர்சியல் திரைப்படம் கொடுத்து ரசிகர்களை ஆசுவாசப்படுத்தினார் சூர்யா. சரி அடுத்தடுத்த படங்கள் எப்படியும் தியேட்டர் தான் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கையில், ஓர் அதிர்ச்சி செய்தி தற்போது வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்களேன் – ஏன் தமிழ் படங்களுக்கு ஆஸ்கர் வழங்கப்படுவதில்லை.! அன்றே கணித்த ஆண்டவர்.!

அதாவது, தற்போது தயாராகும் சூர்யா – இயக்குனர் பாலா திரைப்படம் நேரடியாக OTT க்கு தான் தயாராகி வருகிறதாம். அதற்கடுத்து உருவாகும் சிறுத்தை சிவா திரைப்படம் வெற்றிமாறனின் வாடிவாசல் திரைப்படம் தான் தியேட்டருக்கு வருமாம்.

இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் மீண்டும் மீண்டும் OTTயா என திகைத்து நிற்கின்றனர். ஒருவேளை ஜெய் பீம் போல இயக்குனர் பாலாவும் ஏதேனும் புயலை கிளப்ப உள்ளாரா எனவும் கேட்டு வருகின்றனர்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top