">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பாறையில் மல்லாக்க படுத்து அருவியில் ஆனந்த குளியல் போட்ட அழகு தமன்னா!
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பதிய வைத்துள்ள நடிகை தமன்னா இவர் முதன் முதலில் ‘கேடி’ என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனார் அதன் பிறகு S.J.சூர்யாவின் ‘வியாபாரி’ ‘கல்லூரி ‘ போன்ற படங்களில் நடித்து வந்தார்.
தமிழ் சினிமாவில் அவரின் திரையப்பணத்தில் திருப்பு முனையாக கார்த்தியின் ‘பையா ‘ படம் அமைந்தது அதன் பிறகு அஜித், விஜய், சூர்யா போன்ற தமிழ் சினிமாவின் உச்ச நட்சித்தரங்களுடன் இணைந்து நடித்தார். அதனை தொடர்ந்து பிரம்மாண்ட சரித்திர படமான பாகுபலி தமன்னாவை புகழின் உச்சத்தில் கொண்டு சேர்த்தது.
பாகுபலி படத்திற்கு பிறகு தமன்னாவின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றதால் இந்திய சினிமாவின் உச்ச நடிகையாக விளங்கி வருகிறார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் தீவிரமான யோகா பயிற்சி, சமையல் என வீட்டிற்குள்ளேயே சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்த தமன்னா தற்ப்போது வெளியில் ஊர் சுற்ற ஆரம்பித்துள்ளார்.
ஆம், அருவில் ஆனந்த குளியல் போட்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு “இயற்கையிடம் சரணடைந்து ஒவ்வொரு தேவையின் முழுமையையும் கண்டறியுங்கள். இந்த #WorldNatureConservationDay நாளில் நம்மை கவனித்துக்கொள்வதைப் போலவே இயற்கையையும் கவனித்துக்கொள்வோம் என்று உறுதியளிப்போம் என கூறியுள்ளார்.