
Cinema News
வயசானாலும் வாலியால் எப்படி பாட்டெழுத முடிஞ்சது தெரியுமா?? ஒரு சுவாரஸ்ய தகவல்…
Published on
வாலிப கவிஞர் என்று புகழப்பட்ட கவிஞர் வாலி, நான்கு தலைமுறை இசையமைப்பாளர்களோடு பணியாற்றியது குறித்தான ஒரு முக்கிய தகவலை ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
வாலியின் பெருமை
தமிழ் சினிமாவின் பழம்பெரும் கவிஞராக திகழ்ந்த வாலி, தன்னை காலத்துக்கு ஏற்றார்போல் அப்டேட் செய்து வந்தவர். கிட்டத்தட்ட நான்கு தலைமுறை நடிகர்களுக்கு பாடல்கள் எழுதிய பெருமைக்குச் சொந்தக்காரர் வாலி. இவர் எம்.எஸ்.விஸ்வநாதன் தொடங்கி, சங்கர்-கணேஷ், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, யுவன் ஷங்கர் ராஜா, ஹாரீஸ் ஜெயராஜ், ஹிமேஷ் ரேஸ்மையா, அனிரூத் போன்ற பல டாப் இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.
Vaali
இந்த நிலையில் கவிஞர் வாலி, ஒரு கட்டுரையில் தான் வயதானாலும் எப்படி இந்த சினிமாவில் பாட்டெழுத வாய்ப்பு வந்தது என்பதை குறித்து விரிவாக எழுதியுள்ளாராம். அது என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
வயதானாலும் பாடல் எழுதிய வாலி
ஒரு முறை ஏ.ஆர்.ரஹ்மான், வாலிக்கு தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, “ஒரு படத்திற்கான பாடலை கம்போஸ் செய்யவேண்டும். இந்த பாடலை நீங்கள் எழுதினால்தான் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். ஆதலால் ஒரு ஏழு மணிக்கு ஸ்டூடியோவிற்கு வர முடியுமா?” என கேட்டிருக்கிறார். அதற்கு வாலி, “என்ன மன்னிச்சுக்கோப்பா, இப்போ இருக்குற உடல்நலத்துல என்னால ஸ்டூடியோவுக்கு வரமுடியாது. நீ என்னோட வீட்டுக்கு வந்தா நான் பாட்டெழுதித் தருகிறேன்” என கூறினாராம்.
அதற்கு ரஹ்மான், “அப்படி என்றால் இரவு 7 மணிக்கு உங்கள் வீட்டிற்கு வரட்டுமா?” என்று கேட்க, அதற்கு வாலி, “இல்லை, 7 மணிக்கு இன்னொரு கவிஞர் வீட்டிற்கு வருகிறார். ஆதலால் 9 மணிக்கு வா” என்று கூறியிருக்கிறார்.
AR Rahman
கொட்டும் மழையிலும்..
ஏ.ஆர்.ரஹ்மான் கொட்டும் மழையிலும் சரியாக 9 மணிக்கு வாலியின் வீட்டிற்குச் சென்று அவரிடம் பாடல் வரிகளை வாங்கிவிட்டுச் சென்றாராம். அதே போல் இளையராஜா, ஹாரீஸ் ஜெயராஜ் போன்ற பலரும் வாலியின் வீட்டிற்கே சென்று பாடல் வரிகளை வாங்கிவிட்டுச் செல்வார்களாம்.
இது குறித்து வாலி அந்த கட்டுரையில் குறிப்பிட்டபோது, “இவர்களை போன்று சினிமாத் துறையில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கும் இசையமைப்பாளர்கள் கொடுத்த ஒத்துழைப்பின் காரணமாகத்தான் எல்லா வயதிலும் என்னால் பாடல்கள் எழுதமுடிந்தது” என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வடிவேலு இந்த தப்பை செஞ்சிருக்கவே கூடாது- வைகைப்புயலை வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர்…
ரங்கராஜ் முகத்திரை கிழிப்பு : மாதம்பட்டி ரங்கராஜ் சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்டா என்பவரை ஆசை வார்தத்தை கூறி ஏமாற்றி...
தீயாய் வேலை செய்யும் விஜய் : விஜய் பேச்சில் ஏற்பட்ட தடுமாற்றம் : விஜயின் பேச்சு பல விமர்சனங்களை சந்தித்தாலும் இன்று...
சினிமா நடிகர் பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூத்த பத்திரிக்கையாளர் சேகுவேரா கூறி...
Vijay TVK: திருச்சியில் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்த விஜய் இன்று நாமக்கல் , கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த...
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் பாரதிராஜா. தன்னுடைய படங்களில் புதுமை புகுத்தி அதுவரை வந்து கொண்டிருந்த படங்களிலிருந்து...