
நேற்றிலிருந்து இயக்குனர் லோகேஷின் பேட்டி தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அவர் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் டிசி என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் கூலி. அந்த படம் விமர்சன ரீதியாக சுமாரான வரவேற்பை ரசிகர்களிடம் பெற்று தந்தது. அந்த படத்திற்கு பிறகு அவர் கைதி 2 திரைப்படத்தை இயக்குவார் என்றிருந்த நிலையில் திடீரென அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார்.
இந்தப் படத்தை முடித்த பிறகு தான் அவர் கைதி 2 திரைப்படத்தை கையில் எடுப்பார் என்று சொல்லப்படுகிறது. இதற்கு இடையில் நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து அவர் ஒரு படத்தை இயக்கப் போவதாக ஒரு தகவல் வெளியானது. அது வெளியானதில் இருந்து கைதி 2 திரைப்படத்தை டீலில் விட்டு விட்டார் லோகேஷ் என்று செய்திகள் வரத் தொடங்கியது. இந்த நிலையில் நேற்று சென்னையில் திடீரென பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தி பல கேள்விகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
கூலி திரைப்படத்திற்கு பிறகு ரஜினியையும் கமலையும் வைத்து ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷுக்கு வந்திருக்கிறது. ஆனால் இவர் முழுக்க முழுக்க ஆக்சன் படங்களையே இயக்கியதால் கமல் ரஜினி இணைந்து நடிக்கும் படம் லைட் வெயிட் சப்ஜெக்டாக இருக்க வேண்டும் என்பதால் அந்த படத்தில் இருந்து அவர் விலகி விட்டதாக கூறினார். ரஜினி கமல் படத்தில் இவர் கமிட் ஆனதால் கைதி 2க்கு கொடுத்த கால்ஷீட்டை கார்த்தி வேறொரு இயக்குனருக்கு கொடுத்து விட்டார்.
அதனால் இப்போது லோகேஷ் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார். கைதி 2 திரைப்படத்தை பற்றி அவர் கூறும் பொழுது ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்து உள்ளார். அதாவது கைதி 2வை பொறுத்த வரைக்கும் அது டில்லிக்கும் அவருடைய மகளுக்கும் இடையில் நடக்கும் ஒரு கதை. சமீபத்தில் டில்லியின் மகள் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பார்த்தேன்.

மிகவும் வளர்ந்த பெண்ணாக மாறி இருக்கிறார். அதனால் ஸ்கிரிப்டில் கொஞ்சம் மாற்றங்களை செய்ய வேண்டி உள்ளது. எப்படியும் டில்லியின் மகள் திருமணத்திற்குள்ளாகவே திரைப்படத்தை எடுத்து முடித்து விட வேண்டும் என சிரித்துக் கொண்டே கூறியுள்ளார் லோகேஷ்.