More
Categories: Cinema News latest news tamil cinema gossips

விக்ரம்-3யும் இல்லை., இரும்புக்கை மாயாவியும் இல்லை.! ரசிகர்களுக்கு அல்வா கொடுத்த லோகேஷ்.!?

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் விக்ரம். இந்த படம் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.வெளியான 3 நாட்களில் படம் 150 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.

Advertising
Advertising

சூர்யா ரோலக்ஸ் எனும் வில்லன் கதாபாத்திரத்தில் படத்தின் இறுதிக்காட்சியில், என்ட்ரி கொடுப்பார். இதை வைத்து பார்க்கையில், ரோலக்ஸ் கதாபாத்திரம் விக்ரம் 3-யில் லீட் ரோலாக இருக்கும் எனவும் கூறப்பட்டது.

மேலும், லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்திற்கு பிறகு சூர்யாவை வைத்து இரும்புக்கை மாயாவி எனும் ஒரு படத்தை இருக்கவிருந்தார். இதனை அவரே சில பேட்டிகளிலும் தெரிவித்திருந்தார். மிகப்பெரிய படம் என்பதால், வரும் காலத்தில் இந்த படத்தை உருவாக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார்.

இதையும் படியுங்களேன்- விஜய் படம் பாக்காதீங்க.! காரணம் கூறி பகீர் கிளப்பிய மதுரை ஆதீனம்.!

இதற்கிடையில் தற்போது புதிய தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது அதுஎன்னவென்றால், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சூர்யாவை வைத்து ஒரு புதிய திரைப்படம் எடுக்கவுள்ளாராம். அது விக்ரம் படத்தின் மூன்றாம் பாகமோ, இரும்புக்கை மாயாவியோ இல்லயாம். புதியதாக ஒரு படத்தை சூர்யாவை வைத்து இயக்கவுள்ளாராம்.

லோகேஷ் சூர்யாவை வைத்து விக்ரம் 3 அல்லது இரும்பு கை மாயாவி படத்தை இயக்குவர் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு அல்வா கொடுத்துவிட்டார் லோகேஷ் என்கிறது சினிமா வட்டாரம்.

Published by
Manikandan

Recent Posts