Connect with us

Cinema History

தயாரிப்பாளர் தப்பால் வாழ்க்கையில் இணைந்த ஜோடி..! என்.எஸ்.கிருஷ்ணன் – மதுரம் காதல் கதையில் நடந்த ட்விஸ்ட்.!

NS Krishnan Madhuram: தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத நட்சத்திர தம்பதிகளில் என்.எஸ்.கிருஷ்ணனும், மதுரமும் இருப்பார்கள். ஆனால் இவர்கள் திருமணம் நடந்தது ஒரு தயாரிப்பாளரின் குளறுபடியால் தானாம். அதுகுறித்த  சுவாரஸ்ய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

ஒரு படக்குழு புனே செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்து இருக்கிறார்கள். அதே கூட்டத்தில் தான் என்.எஸ்.கிருஷ்ணனும், மதுரமும் இருக்கிறார்கள். அப்போதெல்லாம் இப்படி படக்குழுவை அனுப்பும் போது வழிச்செலவுக்கு கையில் தயாரிப்பு குழு காசு கொடுத்து விடும்.

இதையும் படிங்க: அட என்னங்க இப்படி..! பாய்ஸ் மணிகண்டன் இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?

ஆனால் என்ன காரணமோ இவர்கள் ரயில் ஏறும் வரை தயாரிப்பு தரப்பில் இருந்து யாருமே வரவில்லையாம். இருந்தும் ரயில் வந்ததும் நடிகர்களை ஏற்றிவிட்டு தானும் ட்ரெயினில் ஏறிவிட்டார் என்.எஸ்.கிருஷ்ணன். இதை மதுரமும் கவனித்து கொண்டே இருக்கிறார். முதல் நாள் கிருஷ்ணன் தன் கை காசை போட்டு எல்லாரையும் கவனித்தாராம்.

இரண்டாம் நாள் அவர் கையிலே காசில்லாமல் போக மதுரத்திடம் உதவி கேட்க அவருக்கோ கடுப்பாகி இருக்கிறது. தயாரிப்பு தரப்பு காசு கொடுக்கணும். இவர் அவரோடதும் செலவு பண்ணி, நம்மகிட்டையும் கேட்குறாரே என நினைத்துக் கொண்டே கொடுத்தும் விட்டார். அடுத்த நாளும் அவரிடமே வந்து காசுக்கு நிற்கிறார் கிருஷ்ணன்.

இதையும் படிங்க: கமல் முன்னாடியே அல்லு பண்ணவரு! வெளியே வந்து சும்மா இருப்பாரா? இவன்தாயா டைட்டில் வின்னர் – கூல் சுரேஷ் பேட்டி

இந்த முறை கடுப்பில் வெடித்து விட்டாராம். அதை பொறுமையாக கேட்டவர், நாம் நடிகர்கள். பொறுமை இருக்கணும். இப்போ நம்ம நடிக்க போகாம தயாரிப்பு குழுவ பழி வாங்க நினைச்சா அது நமக்கும் தான் பாதகமாக அமையும். நம்முடன் வரும் நிறைய பேருக்கு இது முதல் படம். ஏதோ தவறுனால கடைசி நிமிடத்துல தயாரிப்பு நிர்வாகி பணம் கொடுக்க முடியாம போச்சு. எப்படியும் கிடைக்கப்போகுது. 

நடிகர்கள் யாரிடமும் காசு இல்லை. அதனால், நம்ம செலவுகளை ரெண்டு நாளைக்கு பார்த்துக்கிட்டா போனதும் நமக்கு காசு வந்திடப்போகுது. இருக்கவங்க நாம இல்லாதவங்களுக்கு செய்யலாம் என்றாராம். இதில் உருகிய மதுரம் அவர் நகைகளை கழட்டி கொடுத்தாராம். அப்போது என்.எஸ்.கிருஷ்ணத்துக்கும் மதுரம் குணம் பிடித்து விடுகிறது.

இதையடுத்து, ரொம்ப நாள் எடுக்காதவர் தன்னுடைய சக நடிகரை அனுப்பி மதுரத்தினை கல்யாணம் செய்துக்க விருப்பம். அவங்க விருப்பம் என்ன என்று கேட்டு வரச் சொன்னாராம். மதுரமும் அவர் கேட்டதுமே ஓகே சொல்லிவிட்டாராம். அந்த படப்பிடிப்பு நடந்த புனேவில் இயக்குனர் ராஜா சாண்டோவின் தலைமையில் மதுரம் கழுத்தில் தாலி கட்டினாராம் கிருஷ்ணன்.

இதையும் படிங்க: ஆள பாத்து எட போடாதீங்க ஏஜிஎஸ்! வளர்த்து விட்டவரிடமே வேலையை காட்டிய பிரதீப் ரெங்கநாதன்

google news
Continue Reading

More in Cinema History

To Top