அண்ணா!.. இனி எப்ப வந்து உதைப்பீங்க!.. தம்பி அழுறேன் வாங்க.. விஜயகாந்துக்காக உருகிய மன்சூர் அலி கான்

திரிஷா விவகாரத்தை மீண்டும் தட்டி எழுப்பி சர்ச்சை நாயகனாக வலம் வரும் ’சரக்கு’ நாயகன் மன்சூர் அலி கான் தற்போது விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வரும் நிலையில், அவருக்காக உருக்கமான கடிதத்தை வெளியிட்டுள்ளார்.

“அண்ணே! உங்களுக்கு ஏன் இந்த சோதனை.? உங்களோட மன்சூர் அலிகான் தேம்பி தேம்பி அழுகிறேன். சீக்கிரம் குணமாகி வாங்கண்ணே! நடனக்காரனான என்னை நாடறியச்செய்த திருமலை நாயக்கரே நீங்கதானே! வில்லனை அடிக்கவே விடாமல் பில்டப் செய்தும், டூப் போட்டு சூப்பர்மேன் போல ஹீரோக்கள் சீன் காட்டிய காலத்தில், திருப்பி அடி, பறந்து அடி, என உங்களை உதைக்க வைத்து, திருப்பி காற்றிலே பறந்து லெஃப்ட் லெக்ல ஒரு உதை உதைப்பீர்களே அண்ணே! இனி எப்ப வந்து உதைப்பீர்கள்?

இதையும் படிங்க: ஆண்ட்டின்னு எவன் சொன்னான்?!. அசத்தலான அழகில் மயக்கும் திரிஷா.. போட்டோ உள்ளே!…

மதுரை மீனாட்சி அம்மன் தூண்கள் போன்று இருக்கும் உங்களுடைய பலம் பொருந்திய கால்கள் மெலிந்ததேனோ மன்னவனே! ஹீரோயின்களை, துரத்த வைத்து, கடத்த வைத்து. ஓடி. ஆடி ... உழைப்பை பிழிய வைத்தவனே! சாப்பிடுகிற சாப்பாடு உடம்பில் ஒட்ட வைத்தவனே! நீங்க நூறாண்டு வாழ்வீங்க. கருப்பு எம்.ஜி.ஆரே. ஆயிரக்கணக்கானோரை வாழவைத்த ஆலவிருட்சமே! எங்கள் மாநகர காவலனே, பூந்தோட்ட காவல்காரனே உங்களை அந்த ஆண்டவன் வேதனைக்கு உள்ளாக்க கூடாது.

கேப்டனை மருத்துவத்தில் மீட்டு புரட்சிக் கலைஞராய் ஒப்படை! நண்பன் ராவுத்தருக்காக தர்கா சென்றவரை, அவரின் பக்தர்களுக்காக பத்திரமாக தா .. தாங்களிடம் அடிவாங்க தம்பி காத்திருக்கிறேன்..” என்று உருக்கமாக மன்சூர் அலி கான் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஜோவிகாவை காப்பாற்றிய வனிதா விஜயகுமார்?.. அப்போ இந்த வார பலியாடு அந்த போட்டியாளர் தானாம்!..

 

Related Articles

Next Story