தப்பா இருந்தா ஐ யம் சாரி!.. திரிஷா விவகாரத்தில் இறங்கிவந்த மன்சூர் அலிகான்...

லியோ படத்தில் திரிஷாவுடன் ஒரு ரேப் சீன் கூட இல்லை என நடிகர் மன்சூர் அலிகான் பேசிய விவகாரம் பல எதிர்ப்புகளை சந்தித்தது. மன்சூர் அலிகான மனித குலத்திற்கே எதிரானவர் என்கிற ரேஞ்சுக்கு திரிஷா பொங்க பல நடிகைகளும் அவருக்கு ஆதரவாக களம் இறங்கி மன்சூர் அலிகானை திட்டினார்கள்.

ஒருபக்கம் லோகேஷ் கனகராஜ், சிரஞ்சீவி போன்றவர்களும் மன்சூர் அலிகானை கண்டிக்க இந்த விவகாரம் பரபரப்பானது. மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுப்போம் என நடிகர் சங்கமும் பொங்கியது. நான் வில்லன் நடிகர்.. அப்படித்தான் பேசுவேன்.. சினிமாவில் ரேப் சீனை உண்மையாகவா எடுக்கிறார்கள்.. அப்படித்தான் நான் பேசியதும். நான் பேசியதை புரிந்துகொள்ளாமல் என்னை முடக்க பார்க்கிறார்கள்.

இதையும் படிங்க: சினிமாவில் ரீல் ஹீரோ நிஜத்திலும் ஹீரோ தானாம்… காதலுக்காக ராமராஜன் வாங்கிய பலே பஞ்ச்… மொத்தமாக உருகிய நளினி..

என்னிடம் விளக்கம் கேட்காமல் நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. சரக்கு எனும் ஒரு புதிய படத்தை எடுத்திருக்கிறேன். அதோடு, வரும் அரசியலில் போட்டியிடவும் திட்டமிட்டிருக்கிறேன். எப்படியாவது என்ன தடுப்பதற்காக இதையெல்லாம் செய்கிறார்கள். நான் தவறு செய்யவில்லை. எனவே, மன்னிப்பு கேட்கமாட்டேன் என மன்சூர் அலிகான் உறுதியாக சொன்னார்.

ஒருபக்கம், நடிகையும், மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்பு காவல் நிலையத்தில் புகார் அளிக்க, மன்சூர் அலிகானிடம் நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சம்மன் அனுப்பியது. அதோடு, திரிஷா வீட்டிற்கு சென்று அவரின் வாக்குமூலத்தை பதிவு செய்தது. போலீசார் மன்சூர் வீட்டிக்கு போன போது அவர் அங்கே இல்லை.

இதையும் படிங்க: நடிகையை வழிக்குக் கொண்டு வர இயக்குனர் போட்ட திட்டம்… ஆனால் நடந்ததுதான் ஹைலைட்..!

எனவே, அவர் தலைமறைவு ஆகிவிட்டார் என்றெல்லாம் செய்திகள் வெளியானது. இதையடுத்து, மன்சூர் அலிகான் காவல் நிலையத்திற்கு வந்து வாக்குமூலம் அளித்தார். நான் ஜாலியாக பேட்டி கொடுத்தேன். திரிஷா அதை தவறாக புரிந்து கொண்டார். எந்த உள் நோக்கத்துடனும் நான் அப்படி பேசவில்லை.

நான் பேசியது திரிஷாவுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் அதற்கான நானும் மன வருத்தம் அடைகி|றேன். இந்த வழக்கு விசாரணைக்காக எப்போது அழைத்தாலும் நான் வர தயாராக இருக்கிறேன்’ என மன்சூர் அலிகான் எழுதி கொடுத்துள்ளார். இதையடுத்து கடந்த சில நாட்களாக ஓடி வந்த மன்சூர் அலிகான் - திரிஷா பஞ்சாயத்து முடிவுக்கு வந்துள்ளது.

இதையும் படிங்க: 21 வருஷம் கழிச்சி ஒரே ஸ்டுடியோவில் சந்தித்து கொண்ட ரஜினி – கமல்… வைரல் கிளிக்ஸ்..

 

Related Articles

Next Story