அந்த நடிகையை மன்சூர் பேசியபோது சிரிச்சீங்க!. இப்ப மட்டும் கோபம் ஏன்?.. வெளுத்து வாங்கும் பத்திரிக்கையாளர்.

Mansoor Alikhan: தன்னை பற்றிய நேரில் பேசிய போதே சிரித்து கொண்டு இருந்த நடிகை த்ரிஷா, ஒரு வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்ததற்கு பதில் அப்போதே திட்டி இருக்கலாமே என பிரபல திரை விமர்சகர் பிஸ்மி தெரிவித்துள்ளார்.

லியோ படத்தில் நடித்திருந்த மன்சூர் அலிகான் அதை தொடர்ந்து அளித்த பேட்டியில் நடிகை த்ரிஷா குறித்து அவதூறு கருத்துக்களை பேசி இருந்தார். இதை தொடர்ந்து அந்த வீடியோ வைரலானது. இதை குறிப்பிட்டு நடிகை த்ரிஷா, மன்சூர் அலிகான் தன்னை பற்றி பேசிய மோசமான கருத்துக்களை கடுமையாக கண்டித்தார். இதற்கு பிரபலங்கள் பலரும் த்ரிஷாவுக்கு ஆதரவாக மன்சூருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சீனுராமசாமி அப்படி பட்டவர்தான்!… களத்தில் இறங்கி காலி செய்த மனிஷா யாதவ்..

இந்த பிரச்னையில் மன்சூர் அலிகான் ஒருவழியாக மன்னிப்பும் கேட்டு இருக்கிறார். இந்நிலையில் பிஸ்மி தன்னுடைய பேட்டி ஒன்றில், மன்சூர் அலிகான் த்ரிஷாவுடன் எனக்கு லியோ படத்தில் அது இது இருக்கும் என நினைத்தேன். ஆனால் அவரை என்னுடன் நெருங்கவே விடவில்லை. சரி அவர்தான் இல்லை மடோனா பாப்பா இருப்பாங்க.

அவங்களோட ஜாலியா இருக்கலாம் என நினைத்தால் அவர் தங்கச்சியாகி விட்டார் எனப் பேசி இருந்தார். இதை கேட்ட த்ரிஷா அப்போதே கொதித்தெழுந்து வந்து மைக்கை வாங்கி கண்டனம் தெரிவித்து இருக்க வேண்டும். இல்லை ட்வீட்டாவது போட்டு இருக்கலாமே?

இதையும் படிங்க: காலக்கொடுமையே!.. கடல் பட ஹீரோயின் துளசியா இது?.. அக்கா கல்யாணத்துல இப்படி ஆளே மாறி நிக்கிறாங்களே!..

ஏன் சிரித்துக்கொண்டே இருந்தார்? அந்த இடத்தில் அமைதியாக இருந்துவிட்டு இப்போது ஏன் பொங்குறீங்க என்ற கேள்வி எழுகிறது. இருந்தாலும் தன்னை பற்றி ஒருவர் ஆபாசமாக பேசிய வீடியோவுக்கு த்ரிஷா தைரியமாக கண்டனம் தெரிவித்து இருப்பதும் நல்ல விஷயம்தான் என பிஸ்மி தெரிவித்து இருந்தார்.

 

Related Articles

Next Story