Connect with us

Cinema News

சும்மா இல்லாம போய் குட்டு வாங்கிட்டு வந்த மன்சூர் அலிகான்.. த்ரிஷா வழக்கில் என்ன நடந்தது தெரியுமா?

Mansoor Alikhan: நடிகை த்ரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி ஆகியோர் மீது அவதூறு வழக்கினை மன்சூர் அலிகான் பதிவு செய்து இருந்த நிலையில் இன்று அந்த மனுவின் மீதான விசாரணை நடந்தது. அதில் மன்சூருக்கு தான் கொட்டு விழுந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

லியோ படத்தில் ஒரு வேடத்தில் மன்சூர் நடித்து இருந்தார். அதை தொடர்ந்து ஒரு பேட்டியில் நான் 150 படங்களில் நிறைய பாலியல் வன்முறை காட்சிகள் நடித்து இருப்பேன். த்ரிஷாவையும் கட்டிலில் போட்டு அப்படி நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தேன்.

இதையும் படிங்க: இருவேறு துறைகளில் 60 ஆண்டுகளை கடந்த ஜாம்பவான்கள்.. கமலை இந்த அளவுக்கு யாரும் பாராட்டி இருக்கவே முடியாது

ஆனால் காஷ்மீரில் அவரை யாரும் என் கண்ணிலே காட்டவில்லை என ஒரு பேட்டியில் பேசி இருப்பார். அந்த பிரச்னை சர்ச்சையானது. த்ரிஷாவே தன்னை அவதூறாக மன்சூர் பேசும் வீடியோ என் கவனத்துக்கு வந்தது. அதை வன்மையாக கண்டிக்கிறேன் என்றார். தொடர்ந்து சில இயக்குனர்களும் சப்போர்ட்டாக ட்வீட் செய்தனர்.

ஒரு கட்டத்தில் பிரச்னை விஸ்வரூபம் எடுக்க மன்சூர் அலிகான் சக நடிகை த்ரிஷாவே மன்னித்துவிடு என ஓபனாக கூறினார். அதற்கு த்ரிஷாவும் மன்னிப்பதே தெய்வீகம் என பழமொழியை போட பிரச்னை ஓய்ந்து விட்டதாக ரசிகர்கள் கருதினர்.

இதையும் படிங்க: ரஜினியிடம் சிவாஜி கேட்ட அந்த கேள்வி!.. ஆடிப்போன சூப்பர் ஸ்டார்!.. நடந்தது இதுதான்!..

அப்படியே முடிச்சிட்டா மன்சூர் இல்லையே நான் எங்க மன்னிப்பு கேட்டேன். மரணித்துவிடு தான் சொன்னேன். சிலர் அதற்கு விளக்கம் கொடுக்காதீங்க என்றனர். நானும் விட்டதாக கூறினார். தொடர்ந்து தன்னை பற்றி பேசிய த்ரிஷா, சிரஞ்சீவி, குஷ்பூ மீது அவதூறு வழக்கினை பதிவு செய்தார்.

அதன் விசாரணை இன்று நடந்தது. த்ரிஷா தான் மன்சூர் அலிகான் மீது வழக்கு போட்டு இருக்க வேண்டும். மன்சூர் எப்படி பேச வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மன்னிப்பு கேட்டு விட்டு ஏன் வழக்கு போட வேண்டும் என கண்டித்தனர். மேலும் இந்த விசாரணை 22ந் தேதி தள்ளி வைக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top