vijay

நடிகர் விஜய் 1999ம் வருடம் சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இவரின் பூர்வீகம் இலங்கை.. இவரின் தந்தை லண்டனில் தொழிலதிபர். ஒரு ரசிகையாக விஜயை சந்தித்து பேசிய சங்கீதாவை விஜயின் பெற்றோருக்கு பிடித்துப் போக அது திருமணத்தில் முடிந்தது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவே போய்க் கொண்டிருந்த நேரத்தில் விஜயின் வாழ்க்கையில் ஒரு நடிகை வந்ததாகவும் அவரிடம் விஜய்க்கு தொடர்பு ஏற்பட்டதாகவும் விஜய் சங்கீதா பரபரப்பு புகார்களை கூறியிருக்கிறார்.

அந்த நிலையில்தான் விஜய் திரிஷாவோடு ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டது பேசுபெருளாக மாறியிருக்கிறது. சங்கீதா விவகாரத்து மனுவில் குறிப்பிட்டு சொன்ன அந்த நடிகை திரிஷாதான் என பலரும் நம்புகிறார்கள்..
நேற்று மகளிர் தின விழாவில் பேசிய விஜய் ‘இந்த விஷயத்தை பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்.. அதை நான் பார்த்துக்கொள்கிறே..ன் நீங்கள் காயப்படுவது என் மனதை காயப்படுத்துகிறது’ என பேசியிருந்தார்..

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான் ‘நாங்க விஜய் கட்சியோடு கூட்டணி சேருவோம்.. விஜய்க்கு ஆதரவு தருவோம்.. மக்கள் ஓட்டு போட்டா விஜய் வரலாம்.. ஏன் அவர் வரக்கூடாதா? வரட்டும்.. தமிழுக்கும், தமிழன் நலனுக்கு எதிராக இருக்க கட்சிகளை கிழிப்போம்..

தமிழன்தான் தமிழ்நாட்டை ஆளணும். .விஜய் சங்கீதா அது அவங்களுக்குள்ள இருக்க பிரச்சனை.. அதை எதுக்கு நீங்க தோண்டுறீங்க?.. அடுத்தவன் பொண்டாட்டி பத்தி நீ ஏன் கிளற?.. விஜய் சக்காளத்தி கூட வச்சுப்பரு..உனக்கு எங்கடா வலிக்குது?.. அவன் அவன் பத்தி பேசினா ஆயிரம் விஷயங்கள் வெளியே வரும்’ என பொங்கியிருக்கிறார்..