Connect with us

ரசிகர்களுக்குள் நடக்க இருந்த பெரும் மோதல்… தவிர்க்க எம்ஜிஆர், சிவாஜி செய்த ஐடியா!

mgr and sivaji

Cinema History

ரசிகர்களுக்குள் நடக்க இருந்த பெரும் மோதல்… தவிர்க்க எம்ஜிஆர், சிவாஜி செய்த ஐடியா!

தமிழ்சினிமா உலகின் அடையாளங்களாக இருந்த நட்சத்திரங்கள்னா ஒண்ணு மக்கள் திலகம் எம்ஜிஆர். இன்னொன்னு நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவங்க ரெண்டு பேருக்கும் இடையே பலத்த போட்டி இருந்தது குறையவில்லை. ஆனால் அவங்க ரெண்டு பேருக்கும் இடையில் எப்படிப்பட்ட நட்பு இருந்ததுன்னு தெரியுமா? இதோ அதற்கான ஒரு சம்பவத்தைப் பாருங்கள்.

1957ல் நான் விரும்பும் நட்சத்திரம் என்ற பெயரில் குமுதம் ஒரு போட்டியை நடத்த வேண்டும் என்று விரும்பியது. அதனுடைய முக்கிய நோக்கம் என்னன்னா நான் விரும்பும் நட்சத்திரம் எம்ஜிஆரா.., சிவாஜியா… என்று ரசிகர்களைப் பார்த்துக் கேட்பதுதான்.

அப்படிப்பட்ட போட்டியை நடத்தினால் நிச்சயமாக தங்களுடைய ரசிகர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் வரும் என்று உணர்ந்ததால் எம்ஜிஆர், உடனடியாகக் குமுதம் பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதினார். ‘இது போன்ற போட்டியை நாங்க வரவேற்கவும் இல்லை. ரசிக்கவும் இல்லை… என்று எழுதினார்.

எம்ஜிஆர் மட்டுமல்ல. அவர் அப்படி ஒரு கடிதம் எழுதியதைத் தொடர்ந்து நடிகர் திலகம் சிவாஜியும் குமுதம் பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதினார். இப்படி ஒரு போட்டியை நீங்க நடத்தப் போறீங்க என்ற செய்தி வந்தபோதே உங்க நிருபரைக் கூப்பிட்டு ‘இது போன்ற போட்டியை நடத்தாதீங்கன்னு நான் திட்டவட்டமாக சொல்லிட்டேன். அதனால அன்புகூர்ந்து இதுபோன்ற போட்டியை நீங்க நடத்தாதீங்க’ன்னு எழுதினார்.

ரெண்டு பேருக்கும் நடுவில் எப்படிப்பட்ட போட்டி இருந்த போதும் ஒரு பிரச்சனைன்னு எப்படி இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக செயல்பட்டார்கள் என்பதை எடுத்துச் சொல்வதற்காகத் தான் இந்த சம்பவத்தை நான் குறிப்பிட்டு இருக்கிறேன் என்கிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.

To Top