Connect with us
mgr

Cinema History

என் ராசா.. நீதான் என் புருஷன்!.. திடீரென எம்.ஜி.ஆரை கட்டிப்பிடித்த பெண்.. எப்போது நடந்தது தெரியுமா?..

இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்னன் சினிமாவில் இயக்குனராவதற்கு முன் நாடகங்களுக்கு கதை எழுதிகொண்டிருந்தார். ஸ்ரீதேவி நாடக சபா எனும் குழுவில் இணைந்து நாடகங்களை எழுதினார். அதன்பின் சக்தி நாடக மன்றத்திற்காக ‘எழுத்தாளன்’ என்கிற நாடகத்தை எழுதினார். அந்த காலத்தில் நாடகத்திற்கு கூட்டம் வந்து டிக்கெட் விற்றால்தான் நாடக நடிகர்களுக்கு சாப்பாடே கிடைக்கும். இல்லையேல் பட்டினிதான்.

அப்போதெல்லாம் ஒரு நாடகத்திற்கு கூட்டம் இல்லையெனில் அப்போது பிரபலமாக இருக்கும் சில நடிகர்களை அழைத்து வந்து நாடகத்திற்கு தலைமை தாங்க வைப்பார்கள். எழுத்தாளன் நாடகத்திற்கு கூட்டம் இல்லை என்பதால் நம்பியாரை அழைத்து வருவோம் என யோசித்து கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவரின் வீட்டுக்குபோனார். அவர் போன நேரம் அங்கே எம்.ஜி.ஆரும் வந்தார்.

இதையும் படிங்க: இவனையெல்லாம் ஏன் உள்ள விட்டீங்க!. சிவாஜியை அசிங்கப்படுத்திய எம்.ஜி.ஆர் பட இயக்குனர்…

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வந்த விஷயத்தை நம்பியார் எம்.ஜி.ஆரிடம் சொன்னபோது ‘சரி நானும் ஒரு நாள் வருகிறேன்’ என எம்.ஜி.ஆர் சொல்ல கோபாலகிருஷ்ணனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. சனிக்கிழமை நம்பியார் போவது, ஞாயிற்றுக்கிழமை எம்.ஜி.ஆர் போவது என முடிவு செய்யப்பட்டது. நம்பியார் போன அன்று நல்ல கூட்டம் வந்து நாடக கம்பெனிக்கு நல்ல வருமானம் வந்தது.

அடுத்தநாள் எம்.ஜி.ஆர் வருகிறார் என தெரிந்ததும் மக்களின் கூட்டம் அலைமோதியது அந்த கூட்டத்தில் எம்.ஜி.ஆரை அழைத்து செல்வது கடினம் என யோசித்தார் கோபாலகிருஷ்ணன். உடனே எம்.ஜி.ஆர் ‘நான் காரில் வந்தால்தானே பிரச்சனை. தலையில் தலப்பா கட்டிக்கொண்டு நடந்து வருகிறேன்’ என சொல்ல ‘உங்களை யாரேனும் அடையாளம் கண்டுபிடித்துவிட்டால் அவ்வளவுதான்’ என அதை மறுத்தார் கோபாலகிருஷ்ணன்.

ks gopal

ஒருவழி இருக்கிறது நாடக கொட்டகைக்கு பின்னால் ஒரு வழி இருக்கிறது. ஆனால், அதில் சாக்கடை ஓடும். அந்த வழியாக போனால் உள்ளே போய்விடலாம் என அவர் சொல்ல எம்.ஜி.ஆரோ ‘எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை’ என சொல்ல இருவரும் அந்த வழியே நடந்தனர். கோபாலகிருஷ்ணன் முன்னே செல்ல எம்.ஜி.ஆர் பின்னால் நடந்து வந்தார்.

இதையும் படிங்க: அசோகனை செல்லமாக அழைத்த எம்.ஜி.ஆர்!… பதறி போய் காலை பிடித்து கதறிய சம்பவம்…

அப்போது திடீரென 6 அடியில் ஆஜானு பாகுவான ஒரு பெண் எம்.ஜி.ஆர் கட்டி பிடித்துக்கொண்டு ‘சாமி என் ராசா. நீதான் என் புருஷன். அதானலதான் என் புருஷனயே விரட்டிவிட்டேன்’ என சொல்ல எம்.ஜி.ஆர் அதிர்ச்சி அடைந்தார். கோபலகிருஷ்ணனுக்கோ என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த பெண்ணை அவரால் விலக்க முடியாது. அவர் ஒரு அடி அடித்தால் 10 நாளைக்கு நாம் எந்திருக்க மாட்டோம் என அவருக்கு தோன்றியது.

 

அந்த பெண்ணிடம் ‘அம்மா இப்படி எல்லாம் செய்யக்கூடாது. என்னை விடுங்கள்’ என எம்.ஜி.ஆர் சொல்லியும் அப்பெண் கேட்கவில்லை. அடுத்து எம்.ஜி.ஆருக்கு முத்தம் கொடுக்கவும் அந்த பெண் முயற்சி செய்ய எம்.ஜி.ஆரை அவரை பிடித்து தள்ளிவிட்டு வேகமாக நாடக கொட்டகைக்கு சென்றுவிட்டார். அதன்பின் சில மணி நேரங்கள் எம்.ஜி.ஆரிடம் கோபாலகிருஷ்ணன் பேசவில்லை. நாடகமெல்லாம் முடிந்த பின் அவரை அழைத்த எம்.ஜி.ஆர் ‘என்ன கோபால்.. இன்னும் பயம் போகவில்லையா?’ என சிரித்தாராம்.

பின்னாளில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் சிவாஜியை வைத்து பல படங்களை இயக்கினார். கற்பகம், கை கொடுத்த தெய்வம், செல்வம், பேசும் தெய்வம், குல விளக்கு, குறத்தி மகன் உள்ளிட்ட பல படங்களை அவர் இயக்கியிருந்தார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் ஆசைப்பட்டும் நடக்காமல் போன ஒரே விஷயம்… தடையாக இருந்த அரசியல்….

google news
Continue Reading

More in Cinema History

To Top