Connect with us
ajith

Cinema News

அஜித்னா யாரு? துரைமுருகன் கேட்டதற்கு பின்னாடி இப்படி ஒரு ப்ளாஷ்பேக்கா? நிம்மதியை கெடுத்தவன சும்மா விடுவேனா?

இன்று இணையத்தில் பெரிய பேசு பொருளாக பார்க்கப்படுவது அமைச்சர் துறைமுகம் அஜித்தை யார் என்று கேட்டது தான். தமிழ் சினிமாவில் பெரிய உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் விஜய் அஜித் இவர்களை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். சினிமாவை தாண்டி அவர்கள் சமூகத்திற்காக என்ன செய்தார்கள் என்பதைவிட சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தெரிந்த ஒரு பிரபலங்களாகவே விஜய் அஜித் வலம் வருகிறார்கள்.

அப்படி இருக்கையில் அமைச்சர் துரைமுருகன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அந்த பேட்டியில் விஜய் அஜித் படங்களை பார்ப்பது உண்டா? என்ற கேள்வியை அவரிடம் முன் வைத்தார்கள். அதற்கு துரைமுருகன் அஜித்னா யாரு என கேட்டிருந்தார். இது இணையத்தில் அஜித் ரசிகர்கள் துரைமுருகனை மிகவும் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

இதையும் படிங்க : என்னை விட அந்த நடிகையைத்தான் பெருமையா பேசுனாங்க! ஆனா வந்து நின்னேன்ல!.. கெத்து காட்டும் சமந்தா!…

அரசியலில் ஒரு ஆதிக்கம் மிகுந்த ஒரு தலைவர் அதுவும் பிரபலம் வாய்ந்த ஒரு நடிகரை யார் என கேட்டிருப்பது எல்லோருக்கும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் இதற்குப் பின்னணியில் ஏதாவது ஒரு காரணம் இருக்குமே என்ற சந்தேகத்தையும் எழுப்பி வருகின்றது. அது துரைமுருகன் மீது அஜித்துக்கு இருந்த கோபமா அல்லது அஜித் மீது துரைமுருகனுக்கு இருந்த கோபமா என யோசிக்க வைக்கின்றது.

ஆனால் அனைவருக்கும் தெரிந்த விஷயம். கலைஞர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு பாராட்டு விழாவில் அஜித் தைரியமாக ஒரு விண்ணப்பத்தை முன் வைத்திருந்தார். எங்களை துன்புறுத்துகிறார்கள் என்றும் இந்த விழாவிற்கு கட்டாயப்படுத்தி வரவழைக்கிறார்கள் என்றும் இதற்கு நீங்கள் தான் ஒரு வழி சொல்ல வேண்டும் ஐயா என கூறியிருந்தார். இதனால் கூட துரைமுருகன் இதை மனதிலேயே வைத்துக்கொண்டு அந்த பேட்டியில் கேட்டிருக்கலாம் என கூறினார்கள்.

ஆனால் அதையும் தாண்டி அஜித்திற்கும் துரைமுருகனுக்கும் இடையே ஏற்கனவே ஒரு பழைய மோதல் இருந்திருக்கின்றது. கோட்டூர்புரத்தில் அமைச்சர் துரைமுருகனின் வீடு ஒன்று இருந்ததாம்.அந்த வீட்டு பக்கத்தில் ஒரு பார்க்கில் டென்னிஸ் விளையாடுவதற்காக அஜித்தும் ஷாலினியும் அடிக்கடி வருவார்களாம்.

இதையும் படிங்க : என்னை எல்லாரும் வச்சி செஞ்சபோது கமல் சார் சொன்னது இதுதான்!.. நெகிழும் நெல்சன்!…

அவர்கள் வருவதை பார்ப்பதற்காக ரசிகர்கள் அங்கு கூட்டமாக வந்து நிற்பார்களாம் அந்த டென்னிஸ் விளையாடும் போது அடிக்கிற பால் சத்தம் வீட்டிற்குள் இருக்கும் துரைமுருகனுக்கு கேட்குமாம் இது அவருக்கு ஒரு வித துன்புறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. மறுநாளே அந்தப் பார்க்கை மூடச் சொல்லி துரைமுருகன் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி மூட வைத்திருக்கிறார்.

இதனால் அஜித்துக்கு அப்பவே துரைமுருகன் மீது ஒரு சிறிய வருத்தம் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த இரண்டு விஷயங்களால்தான் அந்த பேட்டியில் துரைமுருகன் அஜித்தை யார் என கேட்டிருக்கிறார் என இந்த தகவலை கூறிய வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்தார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top