எம்எஸ்வி. டியூன் போட ஸ்பாட்லயே எழுதி அசத்திய கண்ணதாசன்… அட அது எவர்கிரீன் சூப்பராச்சே!

by sankaran v |   ( Updated:2025-04-10 05:13:48  )
kannadasan, msv
X

kannadasan, msv

கவியரசர் கண்ணதாசனும், மெல்லிசை மன்னர் எம்எஸ்வியும் சேர்ந்து விட்டால் அங்கு பாடலுக்குப் பஞ்சமிருக்காது. எம்எஸ்வி.யும், கண்ணதாசனும் சேர்ந்து பாடல் உருவாக்கியதை எழுத்தாளர் சுஜாதா நேரில் பார்த்து வியந்துள்ளார். அது என்னன்னு பார்க்கலாமா…

இயக்குனர் சிகரம் பாலசந்தர் கமல், ரஜினி நடிப்பில் இயக்கிய படம் நினைத்தாலே இனிக்கும். இந்தப் படத்தில் அத்தனைப் பாடல்களும் சூப்பர்ஹிட் ரகங்கள். முழுக்க முழுக்க இளைஞர்களுக்காக உருவான படம்தான் இது. ஓபனிங் சாங்கே படத்தில் பட்டையைக் கிளப்பியது. 'எங்கேயும் எப்போதும்' என்ற அந்தப் பாடல் இன்று வரை ட்ரெண்டிங்கில் உள்ளது என்றால் அதற்குக் காரணம் கவியரசர் கண்ணதாசனும், மெல்லிசை மன்னர் விஸ்வநாதனும்தான்.

இந்தப் படத்துக்கு சுஜாதா தான் வசனம் எழுதியுள்ளார். முதல் பாடல் கம்போசிங்கிற்கு பாலசந்தர் என்னையும் அழைத்தார். பிரெசிடென்சி ஓட்டல் அறையில் நடைபெற்றது. அங்கு எம்எஸ்வியிடம் கண்ணதாசன் டியூன் என்னன்னு கேட்கிறார்.

ninaithale inikkumசங்கீதத்தைப் பற்றிய உற்சாகமான டியூன் என அவர் சொல்கிறார். வாசி என்று கவியரசர் சொல்லவும் ஆர்மோனியத்தில் வாசித்துக் காட்டுகிறார். 'தன்னானே தன்னானே..' என அவர் வாசிக்கவும் 'எங்கேயும் எப்போதும் சந்தோஷம் சங்கீதம்' என்கிறார் கவியரசர். அடுத்து 'தானனன்னே தானனன்னே… 'என எம்எஸ்வி டியூன் போட, கவியரசர் இது தன்னானேக்குப் பதிலான்னு கிண்டல் செய்கிறார்.

'சரி. கொஞ்சம் தத்துவம் பேசலாமா?'ன்னு கேட்கிறார் கண்ணதாசன். அதுக்கு எம்எஸ்வி, 'தாராளமா… உங்களுக்குச் சொல்லணுமா கவிஞரே..' என சொல்லவும் கவியரசர் போட்ட வரிகள்தான் இவை. 'ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்… ' என்கிறார் கண்ணதாசன். 'அடடா… சூப்பர். பர்ஃபக்ட் என்கிறார் எம்எஸ்வி. அப்படித்தான் பாடல் உருவானது.

பாடலின் இடையில் 'காலை ஜப்பானில் காபி, மாலை நியூயார்க்கில் காபரே…' என்று பாடலின் இடையே பட்டையைக் கிளப்புகிறார் கவியரசர். இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. இசைக்கச்சேரிகளில் தவறாமல் இடம்பிடிக்கும் பாடல் இது.

1979ல் தமிழ்ப்புத்தாண்டுக்கு படம் வெளியானது. படம் முழுக்க எம்எஸ்வியின் இசை ராஜ்யம்தான். சிங்கப்பூரில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. கமல், ரஜினியுடன் ஜெயப்பிரதா, கீதா, ஜெயசுதா, சரத்பாபு, எஸ்வி.சேகர் உள்பட பலர் நடித்துள்னர். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் படம் வெளியானது. 46 ஆண்டுகள் ஆகியும் இன்னும் இளமைப் பொலிவுடன் திகழ்கிறது இந்தப் பாடல்.

Next Story