வடிவேலு அவ்வளோ ஒர்த் இல்ல.! குழாயடி சண்டையில் தயாரிப்பாளர்.! பதற்றத்தில் 140 பேர்.!
![vadivelu_1_vjcj9cjbcihej vadivelu_1_vjcj9cjbcihej](https://cinereporters.com/wp-content/uploads/2021/10/vadivelu_1_vjcj9cjbcihej.jpeg)
வைகை புயல் வடிவேலு நீண்ட வருடங்களுக்கு பிறகு முழுவீச்சில் தமிழ் சினிமாவில் ஈடுபட்டு வருகிறார். அடுத்து அவர் முன்னணி நடிகராக நடிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றே தற்போது கூறுவோம்.
தலைநகரம் படத்தில் வரும் நாய் சேகர் கதாபாத்திரத்தை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. தலைநகரம் இயக்குனர் சுராஜ் தான் இப்படத்தை இயக்குகிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
இதையும் படியுங்களேன் - வினோத் வேண்டாம்..நண்பனுக்கு வாய்ப்பு கொடுக்கும் அஜித்…சினிமாவுல இதலாம் சகஜம்…..
இப்படத்தில் வடிவேலு வீட்டிற்கான செட்டை தேடிய படக்குழு, அதே போல ஜெய்ப்பூர் அரண்மனையை கண்டுள்ளனர். அங்கு சென்று ஷூட்டிங் செய்யலாம் என தயாரிப்பாளரிடம் 70 பேர் என கணக்கு கூறி அங்கு 140 பேரை களமிறக்கி விட்டாராம் தயாரிப்பளார். ஒரு நாள் செலவு மட்டும் 16 லட்சத்தை கடந்துள்ளது.
பதறிப்போன படக்குழு, முன்னணி நடிகருக்கு கூட ஒரு நாள் படப்பிடிப்பு செலவு இப்படி ஆகாது. இவ்வளவு செலவு செய்யும் அளவுக்கு வடிவேலுக்கு மார்க்கெட் தற்போது இல்லை என இயக்குனரை சத்தம் போட்டு, அதன் பின்னர் மொத்த படக்குழுவையும் சென்னைவரவழைத்து இங்கேயே ஒரு செட் போட்டு படமாக்கி கொள்ளுங்கள் என இயக்குனருக்கு, லைகா கட்டளையிட்டுள்ளது.