நயனுக்கு பாலிவுட்டில் குவியும் வாய்ப்புகள்… அடுத்த பட சம்பளம் இவ்வளவோ?

Nayanthara: தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என ஸ்டைலாக சுற்றி வருபவர் நயன் தாரா. இப்போ அவர் மார்கெட் சரிந்தால் கூட அம்மணி கவலைப்படாமல் தனக்கென ஒரு தனி ரூட்டை பிடித்து அதில் அசால்ட்டாக பயணம் செய்து கொண்டு இருக்கிறார்.

கடந்த வருடம் சினிமாவில் பீக்கில் இருந்தவர் திடீரென விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். அது கூட வைரலாகாத நிலையில், வாடகைத் தாய் மூலம் அவர் அம்மாவான செய்தி பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. ஆனாலும் நயனின் மார்க்கெட்டும் ஆட்டம் கண்டது.

இதையும் படிங்க: ஒன் சைடு காட்டினாலும் செம ஒர்த்து!. வேறலெவலில் இறங்கி விளையாடும் ஐஸ்வர்யா ராஜேஷ்…

அதே நேரத்தில் த்ரிஷா கோலிவுட்டில் தன்னுடைய மார்க்கெட்டை மீண்டும் தக்க வைத்து கொண்டார். தற்போது லியோ, அஜித்தின் விடாமுயற்சி என பிஸியாக நடித்து வருகிறார். ஆனால் நயன் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார்.

அந்த படத்துக்கு அவருக்கு 11 கோடி வரை சம்பளம் கொடுத்ததாக கூறப்படுகிறது. படத்தில் அவர் நடிப்பு பலராலும் பாராட்டுக்களை பெற்றது. அம்மணிக்கு பாலிவுட்டில் தொடர் வாய்ப்புகளும் வர துவங்கியது. தற்போது சஞ்சய் லீலா பஞ்சாலி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறாராம்.

சமீபத்தில் இந்த தகவல் அதிகாரப்பூர்வ தரப்பில் இருந்து கசிந்த நிலையில் அந்த படத்திற்கு நயனுக்கு 12 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது.

இதையும் படிங்க: சரோஜாதேவியை கழட்டிவிட முடிவு செய்த எம்.ஜி.ஆர்!.. பின்னணியில் இருந்த காரணம் அதுதான்!…

தற்போது மணிரத்னம் கமல்ஹாசனை வைத்து இயக்கும் 234வது படத்தில் அவருக்கு ஜோடியாக நயன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த படத்திலும் இந்தி சம்பளமாக 12 கோடி வரையே கேட்டு இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. அதிலும் முதல்முறையாக கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story