More
Categories: Cinema News latest news

சினிமா கைவிட்டாலும் நான் கைவிட மாட்டேன்!.. கோடம்பாக்கமே சேர்ந்து விரட்டிய இயக்குனரை வாழ வைத்த நயன்தாரா!..

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.இவரை பற்றிய சில விஷயங்கள் தெரிந்திருந்தாலும் இதுவரை தெரியாத ஒரு விஷயம் வைரலாகிக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த சினிமாவுமே விரட்டியடித்த ஒரு இயக்குனருக்கு வாழ்க்கை கொடுத்த சம்பவம் தான் அது.

முதன் முதலில் அஜித்தை வைத்து படம் எடுத்து சினிமாவில் வெற்றி இயக்குனராக வந்தவர் ஏஆர்.முருகதாஸ். அதன் பிறகு மீண்டும் அஜித்தை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என எண்ணியிருக்கிறார். அப்போது ஒரு உதவி இயக்குனர் அவரிடம் ஒரு கதையை சொல்லி அஜித்தை வைத்து எடுத்தால் சரியாக வரும் என கூறியிருக்கிறார்.

Advertising
Advertising

அந்தக் கதையை வைத்து நீண்ட நாள்களாக ஆலோசனைகளும் செய்து ஸ்கிரீன் ப்ளே வரை சென்று அந்த உதவி இயக்குனரை விரட்டியடித்திருக்கிறார் முருகதாஸ். சிறிது நாள்களுக்கு பிறகு முருகதாஸ் விஜயை வைத்து ‘கத்தி’ படம் எடுக்க அதன் டிரெய்லரை பார்த்த அந்த உதவி இயக்குனர் ஷாக் ஆகியிருக்கிறார்.

ஏனெனில் கத்தி படத்தின் கதையை தான் முருகதாஸிடம் அந்த உதவி இயக்குனர் ஏற்கெனவே சொன்னது. அவர் கதையை திருடி தான் கத்தி படத்தை எடுத்திருக்கிறார் முருகதாஸ். ஆனால் அதை பற்றி அந்த உதவி இயக்குனர் எந்த கவுன்சிலிலும் பதிவு செய்யவில்லையாதலால் அவருக்கு ஆதரவாக யாரும் நிற்க வில்லை.

ஒரு வழியாக அவரே யோசித்து அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்து அந்த உதவி இயக்குனருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் முருகதாஸ் கொடுத்து விட்டார். அதன் பின் அந்த உதவி இயக்குனரை போனில் அழைத்த நயன் எனக்கு ஒரு கதை சொல்லுங்கள் எனவும் அதை நான் தயாரிக்கிறேன் எனவும் எந்த ஹீரோ வேண்டுமோ நீங்களே சொல்லுங்கள் எனவும் கூறியிருக்கிறார்.

அதற்கு அந்த உதவி இயக்குனர் எனக்கு யாரும் வேண்டாம் மேம், நீங்கள் தான் ஹீரோ, நீங்கள் தான் கதாநாயகன் என்று சொல்லி ஆரம்பிக்கப்பட்ட படம் தான் ‘அறம்’. அந்தப் படம் நயன் கெரியரில் எவ்ளோ திருப்பு முனையை ஏற்படுத்தியது என அனைவருக்கும் தெரியும். அந்த இயக்குனர் யார் தெரியுமா? கோபி நயினார் தான்.

இதையும் படிங்க : இயக்குனருக்கு நடந்த சோகங்களைதான் படமாக்கியிருக்கோம்! – ஓப்பன் டாக் கொடுத்த அருள்நிதி…

Published by
Rohini