More
Categories: Cinema News latest news

லேடி சூப்பர்ஸ்டாரா? நீங்களாம் லாயக்கே இல்லை..! படப்பிடிப்பில் எக்கச்சக்க தொல்லை.. நயனின் லீலைகள்..!

Nayanthara: உச்சத்தில் இருந்த நயனின் கேரியர் ஒரு கல்யாணத்துக்கு பின்னர் அப்படியே அடிமட்டமாக சாய்ந்து இருக்கும் தகவல் தற்போதைய கோலிவுட்டின் ஹாட் டாக்காக மாறி இருக்கிறது. இதுகுறித்து பிரபல திரை விமர்சகர் அந்தணன் சொல்லி இருக்கும் தகவல் ரசிகர்கள் பலருக்கே அதிர்ச்சி ஆகி இருக்கிறது.

ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக எண்ட்ரி கொடுத்த நயன் அப்போது கோயம்பேட்டுக்கு பஸ்ஸில் வந்து இறங்கினார். ஆனால் இன்று தனி ஜெட் வைத்து இருக்கும் தென்னிந்திய நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்று வலம் வருகிறார். அப்போதெல்லாம் நயனிடம் ஒரு தன்னடக்கம் இருக்குமாம்.

Advertising
Advertising

இதையும் படிங்க: மச்சினியிடம் கதையை திருடினாரா தனுஷ்.. நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் படத்தில் ஒளிந்திருக்கும் சுவாரஸ்யம்..!

ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடந்த போது ஒரு காஸ்ட்யூமை மாற்ற வேண்டும். ஆனால் ராமோஜி பிலிம் சிட்டியில் இருந்து மெயின் கடைக்கு சென்று வர கிட்டத்தட்ட 3 மணி நேரமாவது ஆகும். ஆனால் ஷூட்டிங் மாலையை நெருங்கி விட்டது. அதுக்கு மேல் எடுக்கவும் முடியாதாம். அப்போது நயன் கேமராவை போர்த்தி இருந்த கருப்பு துணியை எடுத்து கட்டி இது ஓகேவா என இயக்குனரிடம் கேட்டாராம்.

அவரும் இதுவே நல்லா இருக்கு எனக் கூற அந்த உடையில் நடித்தும் கொடுத்தாராம். அப்படி இருந்த நயன் இன்னைக்கு அத்தனை சேட்டை செய்கிறாராம். அழுகும் காட்சியில் கண்ணு கெட்டு போயிடும் நான் வேணா வாய் துடிக்கிற மாதிரி நடிக்கிறேன். நீங்க சிஜியில் கண்ணு தண்ணியை சேர்த்துக்கோங்க என்கிறாராம்.

அதிலும் ஷூட்டிங்கில் மதியம் வரை ஒழுங்கா இருப்பவர். அதுக்கு மேல் பிள்ளைகள பார்க்கணும் என கம்பியை நீட்டிவிடுகிறாராம். இதுமட்டுமல்லாமல் ஓ2 படத்தில் ஒரு பஸ் பல அடி மண்ணுக்குள் புதைந்து விடும். அதில் இருந்த எல்லாருமே அழுக்கு மூட்டையாக இருந்தனராம். ஆனால் நயன் மட்டும் ப்ரெஷாக இருந்தார்.

இதையும் படிங்க: விடாமுயற்சியும் இதானா? ரொம்ப ரிஸ்க் எடுக்க வேண்டாம்.. துணிவுக்கு பின்னர் அஜித் எடுத்த முடிவு…!

லேடி சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கும் பங்கம் வந்துவிட்டது. ஏற்கனவே வெள்ளத்தில் நயன் செய்தது விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கும் நிலையில் தற்போது அவர் மீது பரவி வரும் தொடர் குற்றச்சாட்டுகளால் அவர் கேரியரே ஆட்டம் காணும் நிலையும் உருவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

Published by
Akhilan

Recent Posts