ஹனிமூன் எங்க போறீங்க..? வெட்கத்தில் மைக்கை பிடுங்கிய நயன்தாரா.!

Published on: June 11, 2022
---Advertisement---

தமிழ் சினிமாவில் கடந்த 7 வருடமாக காதல் பறவைகளாக சுற்றி திறந்த நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் நேற்று முன்தினம் சென்னை அருகே உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமண விழாவிற்கு ரஜினிகாந்த், அனிருத், விஜய்சேதுபதி, கார்த்தி என பலர் வந்திருந்தனர். இவர்களின் திருமண நிகழ்ச்சி தான் அன்றைய தினமும் அதற்கு அடுத்த நாளும் பேசுபொருளாக இருந்தது. அந்த அளவிற்கு இவர்கள் திருமணம் பிரபலமாகி விட்டது.

அதனை தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு இருவரும் சென்று விட்டனர்.  இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை அண்மையில் இருவரும் சந்தித்தனர். அப்போது தம்பதிகளாக வந்து இருவரும் சந்தித்தனர். அப்போது பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து வந்தனர்.

இதையும் படியுங்களேன் –  சிம்புவை நம்பி தான் வீட்டுக்கு போனேன்.! ஆனால், என்னை ஏமாத்திட்டார்.! – சீரியல் நடிகை பகீர்.!

அந்த சமயம் ஒருவர் நீங்கள் எப்போது ஹனிமூன் செல்வீர்கள் என்று கேட்டுவிட்டார். ஒரு பத்திரிக்கையாளர் உடனே விக்னேஷ் சிவன் அதற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தார். அந்த சமயம் வெட்கத்தில் நயன்தாரா சிரித்து விட்டார். உடனே விக்னேஷ் சிவன், பதில் சொல்ல மைக்கை பார்த்து கொண்டிருந்த போது சட்டென மைக்கை பிடுங்கி அருகில் இருந்தவரிடம் கொடுத்து விட்டார் நயன்தாரா. பிறகு விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் கையசைத்து விட்டு சென்று விட்டனர்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.