
திரைத்துறையில் விவாகரத்து என்பது சாதாரண விசயமாகவே மாறிவிட்டது. சிறு சண்டை என்றாலேஎ நீதிமன்றத்தை நாடி விடுகின்றனர். ராமராஜன்,கமல்ஹாசன், பார்த்திபன், பிரபுதேவா, தனுஷ், ஜி.வி.பிரகாஷ் எனப் பல முன்னணி நட்சத்திரங்கள் தங்களது மனைவியை விட்டு பிர்ந்துள்ளனர். ஆனால், அவர்கள் அனைவரும் மனைவியை பிரிந்தாலும் எந்த இடத்திலும் மனைவியை பொதுவெளியில் குரைகூறவில்லை அல்லது அவர்களது மனம் காயப்படும் அளவில் நடந்துகொள்ளவும் இல்லை.
ஆனால் நடிகர் விஜய்யின் அணுகுமுறை முற்றிலும் மாறுபட்டதாகவே தெரிகிறது. ஒருபுறம் விஜய் மனைவி சங்கீதா , தனது கணவர் திருமணத்தை மீறிய உறவில் உல்ளார். இதனை கைவிட வேண்டும் என்று கூறியும் அவ்ர் கண்டுகொள்ளவேயில்லை என்றும் நீதிமன்ற புகாரில் கூறியுள்ளார். இது கடந்த வாரம் முதலே தமிழகமெங்கும் பரபரப்பை கிளப்பியது. அப்படியெல்லாம் இல்லை என்ற நிலையிலேயே விஜய் தொண்டர்கள் அவருக்கு முட்டு கொடுத்து வந்தனர்.
இந்த சூழ்நிலையில் நேற்று நடைபெற்ற திருமண விழாவிற்கு விஜய் திரிஷாவுடன் ஜோடியாக வந்து போஸ் கொடுத்த சம்பவம் எரிகிற நெருப்பில் எண்ணெய ஊற்றியது போல ஆயிற்று. விஜயின் இந்த செயலை அவரது கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி திரைபிரபலங்கள் கூட வசை பாடியுள்ளனர்.
விஜய்யின் இந்த அலட்சியமான போக்கு, நாம் எதைச் செய்தாலும் கைதட்டி ரசிக்க ஒரு பெரும் கூட்டம் இருக்கிறது என்ற அவரது நம்பிக்கையையே காட்டுவதாகப் பலரும் விமர்சிக்கின்றனர்.
இந்த விவகாரத்தில் நடிகர் விஜயை ராமராஜனுடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.
ராமராஜன் – நளினி விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுகொண்டிருந்த நேரத்தில் ஒரு செய்தியாளர் நளினியைப் பற்றி ராமராஜனிடம் கேள்வி கேட்டார். அதற்கு அவர், என் மனைவியைப் பற்றி உங்களிடம் பேசுவது நாகரிகமாக இருக்காது என்று கூறி சென்றார். விவாகரத்து தீர்ப்பு வந்த நாளில் அதே செய்தியாளர் மீண்டும் கேட்க, இப்போது அவருக்கும் எனக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. இன்னொரு வீட்டுப் பெண்ணைப் பற்றி நான் பேசுவது முறையாக இருக்காது என்று கண்ணியமாகப் பதிலளித்து சென்றார் ராமராஜன். ஆனால் விஜய் வேண்டுமென்றே இந்த செயலை செய்துள்ளதாகவே தெரிகிறது. ராமராஜனை செயலை பார்த்தாவது விஜய் திருந்த வேண்டும். பாஒருவர் தனது கேரியரின் உச்சத்தில் இருக்கலாம், ஆயிரம் கோடி சம்பாதிக்கலாம்; ஆனால் அவை எவையுமே பெரிய சாதனைகள் அல்ல. தனது குடும்பத்தையும், தனக்குத் துணையாக இருந்த பெண்ணையும் எந்த ஆண் கண்ணியமாக மதிக்கிறானோ, அவனே உண்மையான மனிதன் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்
மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com


