Connect with us
mansoor

Cinema News

கேப்டனை தவிர யாராலும் கண்ட்ரோல் பண்ண முடியாத ஆளு! சீண்டி விட்டுட்டாங்கப்பா

தமிழ் சினிமாவில் விஜயகாந்த் என்றாலே அனைவரும் அமைதியின் சொரூபமாக மாறிவிடுகிறார்கள். அவர் பெயரை கேட்டாலே மரியாதைக்கும் உயர்வான ஒரு மரியாதையை கொடுக்க தயாராகுகிறார்கள். அந்தளவுக்கு கேப்டன் அனைவர் மனதிலும் குடிகொண்டுள்ளார்.

குறிப்பாக மன்சூர் அலிகான் விஜயகாந்த்  மீது அதிக மரியாதையுடனும் அக்கறையுடனுமே இருந்து வருகிறார். அவரை ஒரு தெய்வமாகவே பாதித்து வருகிறார். இந்த நிலையில் மன்சூர் அலிகான் நடிப்பில் லியோ படம் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இதையும் படிங்க : நல்லா தூங்கி 10 வருஷம் ஆச்சி!.. அந்த பிரச்சனையால வாழ்க்கையே தலைகீழாக மாறிப்போச்சி.. கண் கலங்கிய டிடி

அது விஜய் படம் என்றாலும் மன்சூர் அலிகானுக்கு என்று சில ரசிகர்கள் இருக்கிறார்கள். நீண்ட வருடம் கழித்து மீண்டும் விஜயும் மன்சூரும் சேர்ந்து நடிக்கும் படம் என்பதால் இந்தப் படத்தில் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்தப் படத்தின் புரோமோஷனுக்காக பல பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார் மன்சூர் அலிகான். அப்போது விஜய் டிவி புகழ் ராஜுவும் மன்சூர் அலிகானுடன் சேர்ந்து  கலந்து கொண்டு அந்த  மேடையையே கலகலப்பாக்கினார்கள்.

அப்போது மன்சூர் அலிகான் இருந்தாலே மரண பயமாக இருக்கும் என்றும் எப்போ என்ன பண்ணுவாருனு தெரியாது என்றும் மன்சூரை பற்றி ராஜு கூறினார். அப்போது குறுக்கீட்டு பேசிய மன்சூர் அலிகான் நீ தான் அப்படி சொல்ற. ஆனால் கோடம்பாக்கத்தில் பெரிய கதாபாத்திரம்னு சொல்லி கூப்பிட்டு போகிறார்கள்.

இதையும் படிங்க : அஜித் ஒரு சஸ்பென்ஸான ஆளு! இத செஞ்சா மட்டுமே அவர பத்தி தெரிஞ்சுக்க முடியும் – டிடி சொன்ன ஐடியா

அங்கு போய் பார்த்தால் ஹீரோதான் முழுவதும் அடிச்சுட்டு இருப்பாரு, நான் அடிவாங்கனும். இது கேப்டன் என்றால் பரவாயில்லை. எல்லா நடிகர்களுக்கும் இப்படித்தான் என்றால் எப்படி? இது எனக்கு சுத்தமா பிடிக்கவில்லை. திரும்பி பார்த்தால் வயசு ஆச்சு.

ஆனால் இனிமேல் அப்படி இருக்கக் கூடாது. ஒரு வெறியோடுதான் இருக்கிறேன், இனிமேல் பார்ப்பீர்கள் என்று மிக ஆவேசமாக கிண்டலுடன் பேசினார் மன்சூர் அலிகான். அவர் பேசியதில் இருந்து வில்லன் கதாபாத்திரத்திற்கு உண்டான மரியாதையை கொடுங்கள் என்று கூறுவதை போல இருந்தது.

google news
Continue Reading

More in Cinema News

To Top