Connect with us
tirsha

Cinema News

நடிகர் சங்கத்தை நம்பி மோசம் போன சேரன்! த்ரிஷாவுக்காக பேசி வீணாப் போச்சோ?

Actress Trisha: த்ரிஷா விவகாரம் சூடுபிடித்திருக்கும் நிலையில் முதல் ஆளாக தன் கண்டனத்தை தெரிவித்தவர் இயக்குனர் சேரன். ஆனால் இப்பொழுது வரைக்கும் சேரனுக்கு நன்றி சொன்னாரா என்றால் இல்லை த்ரிஷா. அரசியலில் ஒன்றிய செயலாளராக இருக்கும் ஏவி ராஜு த்ரிஷா குறித்து அவதூறு பேச்சு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அவர் அளித்த பேட்டி இணையம் முழுவதும் பற்றி எரிந்தது. அதன் பிறகு நான் சொன்னது வேறு மாதிரியாக திரித்து சொல்லப்பட்டது என மீண்டும் சர்ச்சையான பேச்சில் சிக்கினார் ஏவி ராஜு. உடனே இது குறித்து த்ரிஷா தன் இணையதள பக்கத்தில் கடும் கண்டனத்தை தெரிவித்தார்.

இதையும் படிங்க: எனக்கும், விஜய்க்கும் நிறைய பிரச்னை இருந்தது… ஆனாலும்?… ஓபனாக பேசிய பிரபல நடிகர்…

அதாவது தொடர்ந்து இந்த மாதிரியான ஆள்களை பார்க்க அருவருப்பாக இருக்கிறது என்றும் இது சம்பந்தமாக என்னுடைய சட்ட நிபுணர்கள் ஆக்‌ஷன் எடுப்பார்கள் என்றும் அந்த பதிவில் போட்டிருந்தார். ஆனால் த்ரிஷாவுக்கு முன்னாடியே இது பற்றி முதல் ஆளாக இயக்குனர் சேரன் தான் அவருடைய எதிர்ப்பை கூறினார்.

அதுமட்டுமில்லாமல் நடிகர் சங்கத்தை நம்பி ‘இந்த மாதிரி நடிகையை கூறியதற்கு கண்டிப்பாக நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் கூறியிருந்தார்.ஆனால் அவர் சொன்ன பிறகு நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் கார்த்தி மற்றும் விஷாலுக்கு சேரன் போன் செய்தாராம்.

இதையும் படிங்க: அந்த விஷயத்துக்காக இரவில் சுவரேறி குதித்த சிவாஜி… பிரபல நடிகர் சொல்லும் சீக்ரெட்…

இருவரும் தொலைபேசியை எடுக்க வில்லையாம். சரி ஒரு மூத்த இயக்குனர் போன் செய்திருக்கிறாரே என மறுபடியும் கார்த்தியாவது விஷாலாவது சேரனை அழைத்தார்களா? என்றால் அதுவும் இல்லையாம். இதற்கிடையில் நமக்காக முதல் ஆளாக குரல் கொடுத்த சேரனுக்கு நன்றி தெரிவிப்போம் என த்ரிஷாவாவது நன்றி சொன்னாரா என்றால் அதுவும் இல்லையாம்.

இதை பற்றி ரசிகர்கள் நடிகர் சங்கத்தின் பொறுப்பை பற்றியும் த்ரிஷாவின் நன்றி மனப்பான்மை பற்றியும் கிண்டலடித்து வருகிறார்கள்.

google news
Continue Reading

More in Cinema News

To Top