நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா, சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, ஜாக்கி ஷராப் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் இதுவரை 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.
ஜெயிலர் திரைப்படம் தமிழ்நாடு மட்டுமின்றி, மற்ற மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் கூட நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு முன்னர் நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருந்தாலும், படம் கடும் விமர்சனத்திற்குள்ளானது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நெல்சன், ஜெயிலர் படத்தில் இருந்து விலகுவதாக கூறினார்.
இதையும் படிங்க- ஜெட்வேக வசூல்!. முதல் தமிழ்படம்!.. தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த ஜெயிலர்…
ஆனால் ரஜினி தான் நம்பிக்கையாக வாய்ப்பு கொடுத்தார். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை என்று கூறும் வகையில் படம் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற ஜெயிலர் படத்தின் வெற்றி விழாவில் பேசிய நெல்சன், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
பத்திரிக்கையாளர்களுக்கும், மக்களுக்கும் நன்றி கூறினார். மேலும் யாருமே என்னை நம்பாத சமயத்தில், எல்லாரும் இந்த படம் ஓடுவது சந்தேகம் தான் என்று நினைத்துக்கொண்டிருந்த சமயத்தில், படம் வெளியாவதற்கு 3 நாட்களுக்கு முன்பு ரஜினி அவர்களுக்கு படத்தை போட்டு காட்டினோம். அவர் படத்தை பார்த்துவிட்டு, நன்றாக இருக்கிறது என்று கூறினார்.
அதன் பின் நான் அவரிடம் கேட்டேன், நான் முதன்முதலில் உங்களிடம் வந்து கதை சொன்னதில் பாதியாவது படத்தில் இருக்கிறதா? எதுவாக இருந்தாலும், வெளிப்படையாக சொல்லுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் நீ சொன்ன கதையை விட படம் 10 மடங்கு நன்றாக வந்திருக்கிறது. கவலை படாதே என்று கூறினார்.
அப்போதே எனக்கு இந்த படம் ஹிட்டாகிவிடும் என்ற நம்பிக்கையும் தைரியமும் வந்துவிட்டது. இத்தனை படங்கள் நடித்து, இத்தனை ஆண்டுகளாக முதலிடத்தில் இருக்கும் அவருக்கு படம் ஓடுமா ஓடாதா என்பது நன்றாக தெரியும். அதே போல படம் பலருக்கு பிடித்திருக்கிறது என்று நெல்சன் பேசினார்.
இதையும் படிங்க- வசூலை அள்ளும் ஜெயிலர்!.. முதல் ஆளாக நெல்சனுக்கு வலை விரித்த அந்த நடிகர்!…
ஆறடி உயரம்..…
Actor Vijayakanth:…
2002ல் மாதவன்,…
தமிழ்ப்படங்களில் வரும்…
Actor Vijayakanth:…