ஜெமினி கணேசன் படத்துக்கு சம்பளத்தை குறைக்க சொன்ன என்.டி.ராமராவ்… அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?...

Gemini Ganesan: ஜெமினிகணேசன் தமிழ் சினிமாவில் காதல் மன்னன் என அழைக்கப்பட்டவர். இவர் மிஸ் மாலினி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். பின் மனம் போல் மாங்கல்யம், காத்திருந்த கண்கள் போன்ற பல திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி அங்கீகாரத்தை உருவாக்கினார்.

இவர் அக்கால நடிகர்கள் மட்டுமல்லாமல் அவ்வை ஷண்முகி, மேட்டுக்குடி போன்ற திரைப்படங்களின் மூலம் இக்கால நடிகர்களுடனும் நடித்திருந்தார். இவரது நடிப்பிற்கு மயங்காதவர்கள் என இருக்கவே முடியாது. அந்த அளவுக்கு இவர் தனது நடிப்பினை சிறப்பாக வெளிக்காட்டியிருந்தார்.

இதையும் வாசிங்க:இது ஷூட்டிங்கா வேற ஏதுமா?!.. சுந்தர். சி-யிடம் வேற மாதிரி கோபப்பட்ட ரஜினி…

காதல் காட்சிகளிலோ சரி மற்ற குணச்சித்திர கதாபாத்திரத்திலும் சரி இவர் தனது நடிப்பின் மூலம் மக்களை கட்டி போட்டவர். அந்த கால இளைஞர்கள் முதல் பருவ பெண்கள் வரை இவரை விரும்பாதவர்கள் இருக்கவே முடியாது. இவர் நடித்த திரைப்படங்களில் ஒன்றுதான் ராமு.

இத்திரைப்படத்தினை தெலுங்கில் தயாரிக்க ஏவிஎம் நிறுவனம் திட்டமிட்டனர். அப்போது ஆந்திராவில் முன்னணி நடிகராக இருந்தவர் என்.டி.ராமராவ். இவர் பாதாள பைரவி, வேலைக்காரி மகள் போன்ற சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராமு திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் சம்பளம் மற்றும் படத்தின் மற்ற விஷயங்களை பற்றி பேச ராமராவிடம் நேரம் கேட்டுள்ளனர்.

இதையும் வாசிங்க:ஓவரா ஆசைபட்டு கடைசில பாலசந்தரிடம் பல்பு வாங்கிய கமல்… அட இப்படி ஒரு சம்பவம் கூட நடந்துருக்கா?…

உடனே ராமராவ் காலை 4.30 மணிக்கு வரசொல்லியுள்ளார். இவர்களும் அந்த நேரத்திற்கு சரியாக சென்றுள்ளனர். அவர் வேறொரு படத்திற்கு தயாராகிக்கொண்டிருந்தாராம். அப்போது அவர்கள் நாங்கள் தமிழில் வெளியான ராமு திரைப்படத்தை தெலுங்கில் தயாரிக்க ஆசைப்படுகிறோம். அப்படத்திற்கு சம்பளமாக எவ்வளவு கேட்கிறீர்கள் என கேட்டனராம்.

அதற்கு ராமராவ் நான் கடைசியாக நடித்த இரு படங்களும் பெரிய அளவில் ஓடவில்லை. நான் இதுவரை 1 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்றேன். நீங்கள் இப்படத்திற்கு பத்தாயிரம் குறைத்து 90 ஆயிரம் கொடுங்கள் என கூறினாராம். இதிலிருந்து அவரின் நேர்மையை புரிந்து கொள்ள முடிகிறது. இப்படிதான் அந்த காலத்தில் நடிகர்களின் பண்பாடு இருந்துள்ளது.

இதையும் வாசிங்க:சிவக்குமார் நடிப்பிற்கு முழுக்கு போட காரணமே அந்த நடிகைதான்!.. இப்படியெல்லாமா பண்ணுவாங்க!..

 

Related Articles

Next Story