விஜய் என்கிட்ட சத்தியம் வாங்கிட்டுதான் நடிச்சார்!.. முக்கிய அப்டேட்டை லீக் செய்த லோகேஷ்…

Published on: October 17, 2023
leo
---Advertisement---

Leo vijay: தமிழ் சினிமா ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படமாக லியோ படம் இருக்கிறது. வருகிற 19ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தை காண விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதற்கு காரணமாக இருப்பது லோகேஷ் கனகராஜ் என்பதுதான்.

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களுக்கு பின் லோகேஷ் இயக்கும் திரைப்படம் இது. அதோடு, லோகேஷ் இயக்கும் படங்களுக்கு என ஒரு தனி ரசிகர் கூட்டமும் உருவாகியிருக்கிறது. அவர் இயக்கும் திரைப்படத்தை எல்.சி.யூ. எனவும் சொல்ல துவங்கிட்டனர்.

இதையும் படிங்க: அத நானே எதிர்பாக்கல!.. தலைவர் 171 படம் உருவானது இப்படித்தான்!.. ரகசியம் சொன்ன லோகேஷ்..

இந்த படத்தின் பெரும்பாலான காட்சி காஷ்மீரில் படம்பிடிக்கப்பட்டது. விஜய் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்பதாக காட்டப்படும் எல்லா காட்சிகளும் அங்குதான் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக படக்குழு பல நாட்கள் காஷ்மீரில் தங்கி படப்பிடிப்பை நடத்தினார்கள்.

இப்படத்தின் முதல் ஷெட்யூலே காஷ்மீரில்தான் துவங்கியது. கடும் குளிரிலும் படாதபாடு பட்டு பல காட்சிகளையும் படக்குழு படம் பிடித்துள்ளார். பொதுவாக விஜய் காலை 7 மணிக்கு படப்பிடிப்புக்கு வந்தால் மாலை 6 மணி ஆனதும் வீட்டிற்கு சென்றுவிடுவார். அதற்கு மேல் அவர் படப்பிடிப்பில் இருக்கவே மாட்டார்.

இதையும் படிங்க: ஏழெட்டு இடத்துல தையலு! இதுல எதுக்கு உனக்கு ஸ்டைலு – தல பற்றி ரத்னகுமார் போட்ட பதிவால் ரஜினி171க்கு வந்த சிக்கல்

பல வருடங்களாக விஜய் அதை கடைபிடித்து வருகிறார். ஆனால், லோகேஷ் கனகராஜின் படங்களில் பல காட்சிகள் இரவில் எடுக்கப்பட்டிருக்கும். கைதி படத்தின் அனைத்து காட்சிகளுமே இரவில்தான் நடக்கும். லியோ படத்திலும் இரவு காட்சிகள் இருக்கிறது. எனவே, ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த லோகேஷிடம் இதுபற்றி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த லோகேஷ் ‘இந்த படத்தில் 15 முதல் 20 நாட்கள் இரவில் நீங்கள் நடிக்க வேண்டும் என விஜயிடம் சொன்னேன். ‘20 நாளைக்கு மேல கேட்க மாட்டல்ல’ என என்னிடம் சத்தியம் வாங்கிவிட்டுதான் சம்மதம் சொன்னார்’ சொன்னது போலவே அத்தனை நாட்களில் இரவு காட்சிகளை எடுத்துவிட்டேன்’ என லோகேஷ் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: நள்ளிரவில் லியோ நடத்திய சாதனை!.. அடேங்கப்பா ஒரே ரத்த களறியா இருக்கே.. பாக்ஸ் ஆபிஸ் பிச்சிக்கப்போகுது!..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.