More
Categories: Cinema News latest news

சைலன்டா அடுத்தடுத்த சம்பவத்துக்கு தயாராகும் பா.ரஞ்சித்.! மிரளப்போகும் இந்திய சினிமா…

தமிழ் சினிமாவில், அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களை இயக்கி, முன்னணி இயக்குனராக வளம் வருபவர் இயக்குனர் பா.ரஞ்சித். இவர் இயக்கும் ஒவ்வொரு படங்களும் சமுதாயத்திற்கு தான் கூற நினைக்கும் கருத்துக்களையும் எந்தவித சமரசமும் இல்லாமல் தான் இயக்கும் படங்களின் மூலம் சொல்லி வருகிறார் இவர்.

Advertising
Advertising

இவர் இயக்கத்தில் வெளியாகும் ஒவ்வொரு படங்களும் வெளியாகும் போதும் அதில் இவர் கூறும் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல குரல்கள் எழும். இவர், இயக்கும் படங்கள் நிச்சயம் தமிழகத்தில் ஒரு பேசுபொருளாக மாறிவரும் அளவிற்கு தனது கருத்துக்களை ஆழமாக தனது படங்களில் புகுத்தி விடுவார்.

இவர் தற்போது சார்பட்டா பரம்பரை வெற்றியை தொடர்ந்து கலையரசன் காளிதாஸ் ஜெயராம் ஆகியோரை வைத்து “நட்சத்திரம் நகர்கிறது” எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை டைட்டிலுடன் வெளியாகவுள்ளது. இந்த படத்தை வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்கில் வெளியீட திட்டமிட்டுள்ளார்கள்.

இதையும் படியுங்களேன்- சூர்யாவுக்கு எனக்கும் என்ன பிரச்சனை தெரியுமா.?! உண்மையை போட்டுடைத்த ‘சிங்கம்’ ஹரி.!

இந்த படத்தை முடித்த பிறகு இயக்குனர் பா.ரஞ்சித் விக்ரமை வைத்து பெரிய பட்ஜெட்டில் 18ம் நூற்றாண்டின் கதைக்களத்தை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். இந்த படம் 3 டி தொழில் நுட்பத்தில் உருவாகவுள்ளது. பா.ரஞ்சித் முதன் முறையாக 3டி -ல படம் எடுக்குறது இந்திய சினிமாவில் ஓர் அதிர்வலையை ஏற்படுத்தும் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Published by
Manikandan

Recent Posts