Connect with us
rowdy baby

Cinema News

அந்த போட்டோ லீக்!… ரவுடி பேபி சூர்யாவை தூக்கிய போலீஸ்!.. இதுக்கு இல்லயா சார் ஒரு எண்டு!…

Rowdy baby suriya: டிக் டாக் ஆப் மூலம் நெட்டிசன்களிடம் பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா. டிக்டாக் ஆப் ஆக்டிவாக இருந்த போது அதில் ஆபாசமாக உடையணிந்தும், அசிங்கமாக பேசியும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். திரைப்படத்தில் வரும் கவர்ச்சியான பாடல்களுக்கு டப்ஸ்மாஸ் செய்தும் வீடியோக்களை வெளியிட்டார்.

ஜிபி முத்துவுடன் இணைந்தும் பல வீடியோக்களை வெளியிட்டார். ஒருகட்டத்தில் அவருடன் மோதல் ஏற்பட்டு அதையே கண்டெண்ட் ஆக்கி வீடியோக்களை வெளியிட்டார். அவரோடு மட்டுமில்லாமல் மேலும் சிலருடன் மோதி பல வீடியோக்களை வெளியிட்டு டிக்டாக் ரசிகர்களை வைப்ரேட் மோடிலேயே வைத்திருந்தார். பலருடனும் ஆக்ரோஷமாக சண்டை போட்டார்.

இதையும் படிங்க: அவ சரியான திமிரு புடிச்சவ! ஜெயிலுக்குள் போனதும் என்ன நடந்துச்சுனா? – மகாலட்சுமியை பற்றி ரவீந்திரன் கொடுத்த ஷாக்

டிக்டாக் ஆப்புக்கு தடை விதிக்கப்பட்டதும் யுடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு வந்தார். திடீரென திருச்சிக்கு அருகே ஒரு இடத்தில் விபச்சாரம் செய்ததாக ரவுடி பேபி சூர்யாவை சில வருடங்களுக்கு முன் போலீசார் கைது செய்தனர். சில நாட்களில் ஜாமின் பெற்று வெளியே வந்தார். அந்த இடத்தில் நான் வேறு காரணத்திற்கு சென்றேன் என விளக்கமளித்திருந்தார்.

கணவரை பிரிந்து வாழ்ந்த இவர் வேறு ஒருவருடன் லிவ்விங் டூ கெதரில் இருந்து வந்தார். ஒரு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் சிறை சென்ற இவர் பல மாதங்கள் சிறையில் இருந்துள்ளார். அதன்பின் வெளியே வந்த இவர் ஊடகங்களில் பேட்டிகள் கொடுத்து பரபரப்பை உண்டாக்கினார்.

அதோடு, டிக்டாக் இலக்கியாவுடன் இவர் பேசும் ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கோவையை சேர்ந்த யு டியூபர் சித்ரா என்பவரிடம் அவரின் ஆபாச புகைப்படத்தை வெளியிடுவேன் எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்த புகாரில் தற்போது போலீசார் மீண்டும் அவரை கைது செய்துள்ளனர். ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் சிக்கா உட்பட 4 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விஜய் மட்டுமில்ல!.. பிரசாந்துக்கும் சம்பவம் பண்ண போகும் வெங்கட்பிரபு!.. தளபதி 68 தெறி அப்டேட்…

google news
Continue Reading

More in Cinema News

To Top