Connect with us
maha

Cinema News

அவ சரியான திமிரு புடிச்சவ! ஜெயிலுக்குள் போனதும் என்ன நடந்துச்சுனா? – மகாலட்சுமியை பற்றி ரவீந்திரன் கொடுத்த ஷாக்

Producer Ravindran: பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியின் கணவரும் பிரபல சினிமா தயாரிப்பாளருமான ரவீந்திரன் கடந்த  மாதம் போலீஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் திரையுலகை மிகவும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. 15.83 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரவீந்திரன் பெய்ல் கிடைத்து திரும்பி வந்திருக்கிறார்.

திடக்கழிவை எரிவாயுவாக மாற்றும் திட்டத்தில் சிம்புவின் ஈஸ்வரன் பட தயாரிப்பாளரான பாலாஜியை இதில் முதலீடு செய்யும் வகையில் ரவீந்திரன் அணுகியதாகவும் ஆனால் பாலாஜி கொடுத்த பணத்தில் ரவீந்திரன் படங்களை தயாரித்ததாகவும் அதனால் என் பணத்தை மோசடி செய்ததாகவும் ரவீந்திரன் மீது பாலாஜி புகார் ஒன்றை அளிக்க இதன் மூலம் ரவீந்திரன் கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: விஜய் மட்டுமில்ல!.. பிரசாந்துக்கும் சம்பவம் பண்ண போகும் வெங்கட்பிரபு!.. தளபதி 68 தெறி அப்டேட்…

சிறையிலிருந்து வெளியே வந்த ரவீந்திரன் முதன் முறையாக ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில் பாலாஜிக்கு எதிராக தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் அதை ஒவ்வொன்றாக வெளியிட்டு நான் பட்ட அதே வேதனையை பாலாஜியும் அனுபவிப்பார் என்று பேசியிருந்தார்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க அவருரைய மனைவி மகாலட்சுமி பற்றியும் இந்த நேரத்தில் பேசினார். போலீஸ் வீட்டிற்கு அதிகாலை வந்ததும் யாருக்கும் ஒன்றுமே புரியவில்லையாம். வீட்டை சோதனை செய்ய வேண்டும் என சொல்ல அதை கேட்டதும் மகாலட்சுமி ரவீந்திரனிடம் ‘அம்மு எல்லாத்தையும் பாத்துக்கோ, எதுனாலும் எனக்கு கால் பண்ணு’ என சொல்லிவிட்டு சீரியல் சூட்டிங் சென்று விட்டாராம்.

இதையும் படிங்க: அஜித் – விஜய் நடிக்க மறுத்த அந்த கதை!.. தில்லா இறங்கி சம்பவம் செஞ்ச நவரச நாயகன்…

ஆனால் இந்த நேரத்திலேயும் அவளால் சீரியல் புரடக்‌ஷனில் பிரச்சினை வரக்கூடாது என்பதற்காகவே சென்றதாக ரவீந்திரன் கூறினார். அதன் பின் அவரை  கைது செய்து புழல் சிறையின் கேட்டின் முன் நிறுத்தினார்களாம். அந்த கேட்டை பார்த்ததும் ரவீந்திரனுக்கு வெற்றிமாறன் படத்தில் வரும் ஜெயில் நியாபகம் வந்து விட்டதாம்.

குபீர் என உடல் எல்லாம் வியர்த்து போக உள்ளே 215 ஏக்கர் நிலப்பரப்பில் ஜெயில். இவருடைய அறைக்கு சுமார் ஒன்றரை கிமீ தூரம் நடக்க வேண்டுமாம். வாழ்க்கையில் இந்த உடம்பை வைத்து நான் நடந்ததே இல்லை என்று கூறினார். மறு நாள் கழிவறையை பார்த்ததும் எப்படிடா இதில் உட்கார்ந்து எழுந்திருக்க போறோம் என நினைத்துக் கொண்டிருக்க ,

இதையும் படிங்க: ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் நடிக்க வேண்டியது இவர்தானாம்! இளையராஜாவால் வாய்ப்பை இழந்த நடிகர்

ஒரு நல்லவர் ஒரு அறைக்கு ரவீந்திரனை அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கே ஒரே ஒரு வெஸ்டர்ன் கழிவறைதான் இருந்ததாம். அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றாராம். ஒரு நாள் மகாலட்சுமி இவரை பார்க்க வந்தாராம்.

அப்பொழுது  மகாலட்சுமி எப்படி உன்னை பார்க்காம இருக்கப் போறேன். தினமும் மிஸ் பண்ணுவேனு சொல்லி வருத்தப்பட்டாராம். மகாலட்சுமியின் காதலை தெளிவு படுத்தும் விதமாக அவ சரியான திமிரு பிடிச்ச கெத்தான ஆள் சார். காதலை வெறித்தனமா அந்த நேரத்தில் என்னிடம் காட்டினாள் என்று ரவீந்திரன் கூறினார்.

மேலும் என்னையும் மகாலட்சுமியையும் பிரிக்க நினைத்த ஒரு சில கூட்டம் ஒரு ம**யும் பண்ண முடியாது என்று சவால் விட்டு பேசினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top