Connect with us
mani

Cinema News

புரோமோஷன் போனத கூட படமா எடுத்திருந்திருக்கலாம்!.. திணறிய மணிரத்தினம்.. எங்கெல்லாம் மிஸ் பண்ணார் தெரியுமா?..

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியானது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம். கடந்த வருடம் முதல் பாகம் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை எகிற விட்டது. முதல் பாகத்தில் அந்த நாவலில் வரும் கதாபாத்திரங்களின் அறிமுகத்தை தெளிவாக விளக்கி காட்டியிருப்பார் மணிரத்தினம்.

அதுவும் முதல் பாகம் முழுவதும் வந்தியத்தேவனாக வரும் கார்த்தியின் கதாபாத்திரம் பார்க்கும் அனைவரையும் மிகவும் ஈர்த்தது. ஆனால் இரண்டாம் பாகம் அந்த அளவு ரசிகர்களை ஈர்க்க வில்லை என்றுதான் பல பேர் கூறினார்கள். அதாவது கல்கியின் நாவலின் படி கதை முழுக்க வந்தியத்தேவனும் பூங்குழலியும் வந்து கொண்டே இருப்பார்கள். ஆனால் படத்தில் பூங்குழலியின் கதாபாத்திரத்தை கூட்டத்தில் ஒருவராக காட்டியிருக்கிறார் மணிரத்தினம்.

பூங்குழலியின் ஆசையே ஒரு ராணியாக வேண்டும் என்பதுதான். கதைப்படி பூங்குழலியை ராணியாக மாற்றியிருப்பார் கல்கி. ஆனால் படத்தில் அதை பற்றி எதையும் காட்டவில்லை. மூன்று மணி நேரம் தான் படம் என்றாலும் நாவலில் முக்கியமான கதாபாத்திரங்களை படத்தில் கொஞ்சம் கூடுதலாக காட்டியிருக்கலாம் மணிரத்தினம்.

மேலும் கதையில் நந்தினி கடைசியில் ஒரு குதிரையில் ஏறி வேகமாக சென்று அப்படியே மறைந்து விடுகிறாள். ஆனால் படத்தில் ஒரு ஆற்றில் மூழ்கி மறைவது போன்று காட்டியிருக்கிறார் மணிரத்தினம். படத்தில் அதிகமாக ரசிக்கப்பட்டதே விக்ரம் ஐஸ்வர்யா ராய் சந்திக்கும் அந்த காட்சிகள் தான்.

அந்த அளவுக்கு உணர்வுப் பூர்வமாக காட்டி ரசிகர்களை மெய்மறக்க வைத்து விட்டார் மணிரத்தினம். மற்றபடி சில இடங்களில் கொஞ்சம் தொய்வு தான் ஏற்பட்டது.மேலும் பொன்னியின் செல்வன் என்று சொன்னாலே ஒரு கம்பீரம், திமிரு, அழகு என எல்லாமே பொருந்தி நிற்கும் கதாபாத்திரத்தை ஜெயம் ரவி சில இடங்களில் தவற விட்டாரோ
என்றுதான் யோசிக்க வைத்திருக்கிறது.

படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது விக்ரமின் நடிப்பு தான் நினைவில் நின்றது. ஆனால் எப்படியாவது படத்தை முடிக்க வேண்டும் என மணிரத்தினம் கொஞ்சம் திணறியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இதுவே வெற்றிமாறன் எடுத்த
நாவலான விடுதலை படம் பார்க்கிறவர்களை அழாமல் வெளியே வரமுடியாது. காரணம் நாவலோடு திரைக்கதைக்கு ஏற்ற மொழியையும் சேர்த்து வெற்றிமாறன் படமாக்கியிருப்பார். ஆனால் மணிரத்தினம் அதை தவற விட்டுவிட்டார் என்று வலைப்பேச்சு அந்தனனும் ஒரு பேட்டியில் கூறினார்.

இதையும் படிங்க : மே 1 அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்!.. ஆனால் அங்கதான் ஒரு ட்விஸ்ட்…

google news
Continue Reading

More in Cinema News

To Top