Connect with us

அப்பா இறந்தபோது நான் ஊர்ல இல்ல.. விஜயகாந்த் செஞ்சதை மறக்கவே முடியாது!.. பிரபு ஃபீலிங்!…

Cinema History

அப்பா இறந்தபோது நான் ஊர்ல இல்ல.. விஜயகாந்த் செஞ்சதை மறக்கவே முடியாது!.. பிரபு ஃபீலிங்!…

கோலிவுட்டில் நடிப்பு சக்கரவர்த்தியாக திகழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். பராசக்தி என்கிற படம் மூலம் நடிக்கத் தொடங்கி அதன்பின் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவர் சிவாஜி. இவர் ஏற்காத கதாபாத்திரங்களே இல்லை என சொல்லுமளவுக்கு பல கதாபாத்திரங்களிலும் நடித்தார்..

எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறாரோ அதே கதாபத்திரமாக மாறிவிடும் திறமையை சிவாஜி கணேசனுக்கு உண்டு. அவரைப் போல ஒரு நடிகர் இந்தியாவிலேயே இல்லை என பலரும் அவருக்கு புகழாரம் சூட்டினார்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கடந்த 2001 ஜூலை 21ம் தேதி மரணமடைந்தார். அப்போது சடங்குகள் செய்து சிவாஜி கணேசன் உடலை வண்டியில் ஏற்றி ஊர்வலமாக சென்று அடக்கம் செய்தார்கள் அந்த பொறுப்பை முழுக்கமாக ஏற்றுக் கொண்டவர் நடிவர் விஜயகாந்த்..

இந்நிலையில் நடிகர் விஜயகாந்த்துக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த மீசை ராஜேந்திரன் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய போது ‘சிவாஜி சார் இறந்தபோது பிரபு சார் ஊர்ல இல்ல.. கேப்டன்தான் புள்ளை மாதிரி எல்லாத்தையும் செய்தார்.. நீங்க பார்த்திருப்பீங்க.. அவ்வளவு கூட்டத்தை ஒத்த ஆளா துண்டை வச்சி விரட்டினார்.. பிரபு சார் என்கிட்ட பேசும்போது ‘அப்பா இறந்தப்போ நான் வெளிநாட்டில் இருந்தேன்.

vijayakanth

விஜி ஒரு பிள்ளை மாதிரி கூடவே இருந்து குளிக்காம, தூங்காம, சாப்பிடாம எல்லா காரியமும் செய்தார். வந்தவங்க எல்லாரும் போயிட்டாங்க.. ஆனா விஜி மட்டும் அடுத்த நாள் என் கூடவே இருந்து வீட்டுக்கு வந்து அம்மா கைய புடிச்சு அழுதுட்டு ‘இனி உங்கள் பையனுக்கு நாங்க இருக்கோம்.. கவலைப்படாதீங்கனு எங்களுக்கெல்லாம் ஆறுதல் சொல்லிட்டு 2 மணி நேரம் இருந்துட்டுதான் போனாரு’ என என்னிடம் சொன்னார்’ என கூறியிருக்கிறார்…

To Top