கோட் ஷூட்டிங் லொகேஷன் மாறியதால் பிரபுதேவாவுக்கு அடித்த ஜாக்பாட்!.. அனுஷ்காவுடன் டூயட் பாடப்போறாரா?

Published on: March 17, 2024
---Advertisement---

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் இருந்து கேரளாவுக்கு மாற்றப்பட்டது யாருக்கு நல்லது இல்லையோ பிரபுதேவாவுக்கு நல்ல விஷயமாக மாறியுள்ளது.

கோலிவுட்டில் நடிகர் விஜய்யை வைத்து போக்கிரி, வில்லு உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபுதேவா பாலிவுட்டுக்கு சென்று சல்மான்கான் படங்களையும் இயக்கி வந்தார். ஆனால் அவர் இயக்கும் படங்கள் பெரிதாக ஓடவில்லை என்பதால் மீண்டும் நடிகராக மாறிவிட்டார்.

இதையும் படிங்க: தலையில காரக் குழம்பு கொட்டிடுச்சா!.. ஷிவானி நாராயணனின் புது லுக்கை பார்த்து.. பகீரான ஃபேன்ஸ்!..

ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய், பிரசாந்த், மோகன், அஜ்மல், சினேகா, லைலா, திரிஷா மற்றும் மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்து வரும் படத்தில் பிரபுதேவாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கையில் துப்பாக்கி எல்லாம் வைத்துக்கொண்டு விஜயின் டீமில் அவர் இருக்கும் புகைப்படம் போஸ்டராக வெளியானது.

கேரளாவில் தற்போது கோர்ட் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அங்கே சென்ற பிரபுதேவா சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார். இந்நிலையில், அனுஷ்கா நடித்து வரும் மலையாள திரைப்படமான கத்தனார் நடிக்கும் வாய்ப்பு பிரபுதேவாவுக்கு அமைந்துள்ளது. அதன் அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் தற்போது புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: கொடுத்து வச்ச சூர்யா!.. கவர்ச்சி கடலாக கலக்கும் கங்குவா ஹீரோயின்!.. ஜோதிகா தான் ரொம்ப பாவம்!..

கோர்ட் படத்தின் லொகேஷன் மாற்றப்பட்ட நிலையில், அதுவும் பிரபுதேவாவுக்கு சாதகமாக அமைந்துவிட்டது என படக்குழுவினரே பேசி வருகின்றனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.