இங்கிலீஷ் டைட்டிலே காலத்தை ஓட்டும் ப்ரதீப் ரங்கநாதன்… விக்னேஷ் சிவனும் அதே ஸ்டைலில் இறங்கிட்டாரே..!
![இங்கிலீஷ் டைட்டிலே காலத்தை ஓட்டும் ப்ரதீப் ரங்கநாதன்… விக்னேஷ் சிவனும் அதே ஸ்டைலில் இறங்கிட்டாரே..! இங்கிலீஷ் டைட்டிலே காலத்தை ஓட்டும் ப்ரதீப் ரங்கநாதன்… விக்னேஷ் சிவனும் அதே ஸ்டைலில் இறங்கிட்டாரே..!](https://cinereporters.com/wp-content/uploads/2023/12/pradeep.jpg)
Pradeep Ranganathan: சின்ன பட்ஜெட் படத்தாலும் ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்க முடியும் என்பதை சாதித்து காட்டிய முக்கிய இயக்குனர்களில் ஒருவர் தான் ப்ரதீப் ரங்கநாதன். அவரின் அடுத்த படத்தின் டைட்டிலில் ஒரு சூப்பர் ட்விஸ்ட் வைத்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.
ஷார்ட் பிலிம் மூலம் இயக்குனராக எண்ட்ரியானவர் ப்ரதீப் ரங்கநாதன். இவரின் முதல் படம் கோமாளி. ஜெயம் ரவி நடிப்பில் வேல்ஸ் பிலிம்ஸ் இப்படத்தினை தயாரித்தது. ரஜினியுன் நடித்த நடிகைகள் எல்லாம் பாட்டி ஆகிட்டதாக ஒரே லைன் பாடலை வைத்தே படத்தினை ஃபேமஸ் ஆக்கிவிட்டார்.
இதையும் படிங்க: அன்னபூரணி விமர்சனம்: வெஜிடேரியன்களை இப்படி வெறியேத்துறாரே நயன்தாரா?.. படம் விளங்குச்சா!..
படம் அமோக ஹிட் கொடுத்தது. ப்ரதீப்பையும் பலர் பாராட்டினர். இப்படத்தினை தொடர்ந்து விஜயின் ஹிட் படமான லவ் டுடே படத்தின் டைட்டிலை வைத்து ஒரு படத்தினை இயக்கி நடித்தார். அப்படம் தான் ப்ரதீப்பின் லைஃபையே மாற்றியது. கிட்டத்தட்ட 2கே கிட்ஸ்கள் கொண்டாடிய படமாக அமைந்தது. படம் சின்ன பட்ஜெட் என்றாலும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.
இப்படத்தினை தொடர்ந்து இயக்குனராக இருந்த ப்ரதீப்பை நடிகராக ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர். அதனால் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ப்ரதீப் ரங்கநாதனை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்து இருந்தனர்.
இதையும் படிங்க: அண்ணா!.. இனி எப்ப வந்து உதைப்பீங்க!.. தம்பி அழுறேன் வாங்க.. விஜயகாந்துக்காக உருகிய மன்சூர் அலி கான்
இருவருமே கமர்ஷியல் கூட்டணி என்பதால் படம் ரொமாண்டிக் காமெடி ஜானரில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. முக்கிய கேரக்டரில் நயனும் இப்படத்தில் நடிப்பாராம்.
தற்போது இப்படத்திற்கு எல்.ஐ.சி என பெயர் வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. அதாவது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற பெயரினை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.