Connect with us
raveena

Biggboss Tamil 7

பிரதீப் ரவீனாவிடம் சொன்ன அந்த வார்த்தை! ரெட் கார்டு கொடுத்ததை பற்றி அக்‌ஷயா சொன்ன பளீச் உண்மை

Pradeep Antony: விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது மக்களின் பேராதரவை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி. நாளுக்கு நாள் ஏதாவது ஒரு பிரச்சினை பூதாகரமாகி ரசிகர்களை ஒருவித எதிர்பார்ப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது.

இந்த வார எலிமினேஷனில் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற ஆர்வம் ஒருபக்கம் இருந்தாலும் ஏற்கனவே கடந்த வாரம் வெளியேறிய அக்‌ஷயா வீட்டில் நடந்த சில விஷயங்களை பேட்டிகளில் தெரிவித்து வருகிறார். இதில் பிரதீப் பற்றியும் சொல்லியிருக்கிறார்.

இதையும் படிங்க: என் வாழ்க்கையில் முக்கிய 2 நடிகைகள்.. 2 இயக்குனர்கள்.. மனம் திறந்து சொன்ன விஜயகாந்த்…

பிரதீப் பெண்களின் பாதுகாப்பு கருதி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இது சம்பந்தமாக பிரதீப்பிற்கு ஆதரவாக மக்கள் தங்கள் பதிவினை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். அவருக்கு ஒரு பெரிய ஆர்மியே வெளியே உருவாகியது.

இன்று வரை அவருக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பப் பட்டுத்தான் வருகின்றன. அவர் வெளியேறியதற்கு முக்கிய காரணமாக இருந்தது ரவீனா சொன்ன அந்த அரைஞான் கயிறு மேட்டர்தான். ஆனால் அதை பற்றி ரவீனா கமலிடம் தெளிவாக சொல்லும் போது பீப் கொடுத்து ஆஃப் செய்து விட்டனர்.

இதையும் படிங்க: இங்கிலீஷ் டைட்டிலே காலத்தை ஓட்டும் ப்ரதீப் ரங்கநாதன்… விக்னேஷ் சிவனும் அதே ஸ்டைலில் இறங்கிட்டாரே..!

அதனால் பிரதீப் சொன்ன அந்த வார்த்தை என்னவாக இருக்கும் என்று ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் அக்‌ஷயாவை பேட்டி எடுத்த தொகுப்பாளினி இதை பற்றி கேட்டிருக்கிறார். ஆனால் அக்‌ஷயா அதை ஆஃப் கேமிரா முன் தான் சொன்னாராம்.

பிரதீப் ரவீனாவிடம் சொன்னது பெரிய வார்த்தையாம். அதை சொன்ன பிறகுதான் அதை வைத்தே வீட்டில் இருந்தவர்கள் ஆலோசித்து ரெட் கார்ட் கொடுக்க முன்வந்தார்களாம். அது ஏன் சொன்னார்? எதுக்காக சொன்னார் என்பதை ரவீனா வெளியே வந்தால்தான் தெரியும் என கூறுகிறார்கள்.

இதையும் படிங்க: பருத்திவீரன் படம் பார்த்த கலைஞர்!.. அதுக்கு அப்புறம் நடந்ததெல்லாமே ஹைலைட்தான்!..

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top