vijay-prasanth

நேற்று நடைபெற்ற ஏஜிஎஸ் திருமண விழாவில் தவெக தலைவர் விஜய் நடிகை திரிஷாவுடன் ஒரே காரில் ஜோடியாக வந்தனர். பின் மணமக்களை வாழ்த்திவிட்டு ஜோடியாக் போஸ் கொடுத்தனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து வேண்டி மனு தாக்கல் செய்திருக்கும் சூழ்நிலையில் இவர்கள் பொது வெளியில் வந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
விஜயின் இந்த நடவடிக்கை பலரையும் வெறுப்படைய வைத்துள்ளதாகவே தெரிகிறது. ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையை சார்ந்தவர்கள், பத்திரிக்கையாளர்கள் என பலரும் தங்களது கருத்தினை பதிவு செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் பிரபல சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி தனது எக்ஸ் பக்கத்தில் விவாகரத்து பண்ணிட்டு நீங்க யார் கூட வேணாலும் இருந்தாலும் கேள்வி இல்ல. உங்கள நம்பி ரெண்டு பிள்ளைங்க இருக்கு அவங்களுக்கு இன்னிக்கு பயங்கரமா வலிக்கும். இத யோசிக்க முடியலனா நீங்க எப்படி மக்களை யோசிப்பீங்க என்றும், இதுக்கெல்லாம் முட்டு குடுக்க முடியாதுனா என்றும், இனி உங்களுக்கு இதற்கெல்லாம் முட்டு கொடுக்க முடியாது என்றும் பகிர்ந்திருந்தார்.

மேலும் இனி தா.வெ.க வால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை . தலைவன் சரி இல்லாத கட்சி , மக்களுக்கு ஒரு துரும்பை கூட கிள்ளி போடப்போவதில்லை !!
இத்தனை தொண்டர்களின் நம்பிக்கையாக இருக்கும் விஜய் , அவ்வளவு பேரையும் அலட்சியப்படுத்தி , தனக்கு பிடித்ததை மட்டும் செய்கிறார் என்றால் – நாளை நாட்டு மக்களுக்கும் இதையே தான் செய்ய காத்து இருக்கிறார். அரசியல் என்பது பொது வாழ்வு , அதை வாழ அவரால் முடியாது என்பதை நேற்று இரவு நிரூபித்து விட்டார் விஜய் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.