யோகிபாபுவுக்கு திறமையெல்லாம் ஒன்னும் கிடையாது... ஓப்பன் டாக் கொடுத்த பத்திரிக்கையாளர்...

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் யோகி பாபு. நடிகர் யோகி பாபு நடிக்கும் திரைப்படங்கள் யாவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. ஆரம்பத்தில் சின்ன சின்ன திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்த யோகி பாபு போகப் போக ரஜினிகாந்த் விஜய் போன்ற பெரும் பெரும் நடிகர்களுடன் நடிக்க துவங்கினார்.

கிட்டத்தட்ட சந்தானம் கவுண்டமணியின் நகைச்சுவை பாணியை ஒட்டிய யோகி பாபுவின் நகைச்சுவை காமெடிகளும் இருக்கும். கவுண்டமணி சந்தனத்தை போலவே இவரும் கதாநாயகர்களை கூட கலாய்க்கும் ஒரே நகைச்சுவை பாத்திரமாகத்தான் நடிப்பார்.

அதிகமாக வரும் பட வாய்ப்புகளை தொடர்ந்து தற்சமயம் யோகி பாபு சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். ஏற்கனவே இவர் கதாநாயகனாக நடித்த கூர்கா, மண்டேலா போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.

காபி அடிக்கிறாரா யோகிபாபு:

இந்த நிலையில் பிரபலமான சினிமா பத்திரிக்கயாளரான செய்யாறு பாலு ஒரு பேட்டியில் இதுக்குறித்து கூறும்போது “உண்மையில் யோகிபாபுவிற்கு என தனிப்பட்ட திறமைகள் எதுவும் கிடையாது. அவர் சந்தானம், கவுண்டமணியை போல செய்து பிரபலமாகி வருகிறார். மற்ற நடிகர்களை போல அவருக்கென்று தனி பாணியான காமெடி கிடையாது.

சந்தானம் நகைச்சுவையை விட்டு சென்றபோது தமிழ் சினிமாவில் ஒரு வெற்றிடம் உருவானது. அப்போது அதை நிரப்ப ஆள் இல்லாமல் இருந்தது. அதை பயன்படுத்திக்கொண்ட யோகிபாபு சந்தானத்தின் பாணியை பின்பற்றி பிரபலமாகி விட்டார்” என கூறியுள்ளார் செய்யாறு பாலு.

இதையும் படிங்க:ஒரே படத்துல ரெண்டு பேருக்கு டப்பிங் கொடுத்த விக்ரம்… ஆனா கண்டுபிடிக்கவே முடியல!..

 

Related Articles

Next Story