More
Read more!
Categories: Cinema News latest news

39 வயசுலயும் சும்மா கின்னுன்னு இருக்கேன்!.. நீங்க என்னடா பாடி ஷேம் பண்றது.. பட்டாசா வெடித்த பிரியாமணி!

நீங்க என்ன ஆன்ட்டின்னு சொன்னாலும், பாடி ஷேமிங் பண்ணாலும் 39 வயசுலயும் நான் ஹாட்டாத்தான் இருக்கேன் என சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை பிரியாமணி பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பெங்களூரில் பிறந்து வளர்ந்த நடிகை பிரியாமணி 2003-ல் தெலுங்கில் வெளியான எவரு ஆட்டகாடு படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்த ஆண்டு 2004 ல் பாரதிராஜா இயக்கத்தில் தமிழில் வெளியான கண்களால் கைது செய் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் பிரியாமணி.

Advertising
Advertising

இதையும் படிங்க: லோகேஷ் என்னங்க படம் பண்றாரு!.. எல்லாமே ஸ்டன்ட் மாஸ்டர் தான்!.. ஓப்பனா சொன்ன பிரபலம்!..

அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கினார். 2007-ம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படம் நடிகை பிரியாமணியை பட்டிதொட்டி என எல்லா இடங்களிலும் பிரபலமாக்கியது.

விஷாலுடன் மலைக்கோட்டை, விக்ரமுடன் ராவணன், பிரித்வி ராஜ் உடன் நினைத்தாலே இனிக்கும், சாருலதா, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கஸ்டடி திரைப்படம் என பல தமிழ் படங்களில் நடித்தவர் பிரியாமணி.

இதையும் படிங்க: அட தொட்டதுக்கெல்லாம் சினுங்குவாரு போல – கமல், ஸ்ரீதேவி போஸ்டரை பார்த்து விரக்தியில் ரஜினி எடுத்த முடிவு!

ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் கவர்ச்சி குத்தாட்ட பாடலுக்கு நடனமாடி சென்ற பிரியாமணி அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரியாமணி ஜான் படத்தில் நடித்த சுவாரசியமான அனுபவங்கள் குறித்தும் இயக்குனர் அட்லி எப்படி வேலை வாங்குவார் என்பது பற்றியும் பேசியுள்ளார். ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் வாய்ப்பை தனக்கு தேடித்தந்த காஸ்டிங் டைரக்டர் மூலமாகத்தான் ஜவான் படத்தின் வாய்ப்பும் கிடைத்தது என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நோக்கம் வெவ்வேறாக இருந்தாலும் முடிவு ஒன்னுதான்! அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு வழிவிட்ட விஜய், அஜித்

திருமணத்திற்குப் பிறகு நடிக்க முடியுமா என்கிற சந்தேகம் தனக்கும் இருந்ததாகவும், ஆனால் திருமணமான மூன்றாவது நாளில் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்த நிலையில், என்னுடைய கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் எனக்கு கொடுத்த ஸ்பேஸ் தான் இன்றுவரை நான் நடிகையாக வளம் வர காரணம் என்றார்.

எனக்கு இப்போ 39 வயது ஆகிறது, அடுத்தாண்டு 40 வயது ஆகிவிடும், என்னை ஆன்ட்டி என கிண்டல் செய்தாலும் பாடி சேமிங் செய்தாலும் அதைப் பற்றி எல்லாம் நான் கண்டு கொள்ளவே மாட்டேன். ஏனென்றால் 39 வயதில் நான் நல்லா ஹாட்டா தான் இருக்கேன் என பளிச்சென பேசியுள்ளார் முத்தழகு பிரியாமணி.

Published by
Saranya M

Recent Posts