Connect with us
goundamani

Cinema History

கவுண்டமணியை ஏமாத்தி அந்த படத்தை எடுத்தோம்!… பல வருடங்கள் கழித்து சொன்ன இயக்குனர்…

பாரதிராஜாவை போலவே நகராட்சியில் கொசு மருந்து அடிக்கும் வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்தவர் வி.சேகர். சென்னை வந்து வாய்ப்பு தேடிய அவர் இயக்குனர் பாக்கியராஜிடம் உதவியாளாரிடம் சேர்ந்தார். சேகர் இயக்கிய முதல் திரைப்படம் ‘நீங்களும் ஹீரோதான்’.

நடிகர்கள் என்பவர்கள் தேவதூதன் அல்ல. சினிமாவில் காட்டுவது போல நிஜவாழ்வில் அவர்கள் ஹீரோ இல்லை. சினிமாவில் நடித்துவிட்டு அரசியலிலும் நுழைந்து நேரிடையாக முதல்வர் ஆக ஆசைப்படுகிறார்கள். அவர்களை ரசிகர்களும் முட்டாள்தனமாக ஆதரிக்கிறார்கள் என்பதை மையக்கருவாக வைத்து அப்படத்தை இயக்கி இருந்தார். நடிகர்களை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இதையும் படிங்க: என்னை விட்ருங்கப்பா!. எனக்கு சினிமாவே வேணாம்!… கவுண்டமணி முடிவெடுக்க காரணம் இதுதானாம்!…

இப்படத்தை பத்திரிக்கைகள் பாராட்டினாலும் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. ஏனெனில், ரசிகர்கள் தங்களுக்கு தலைவனாக நினைப்பவர்களை அவர் திட்டியது யாருக்கும் பிடிக்கவில்லை. அதன்பின் குடும்ப கதைகளை இயக்க துவங்கினார். பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், ஒன்னா இருக்க கத்துக்கணும், பொறந்த வீடா புகுந்த வீடா, காலம் மாறிப்போச்சி, எல்லாமே என் பொண்டாட்டிதான் என பல படங்களை இயக்கி இருக்கிறார்.

இவரின் இயக்கத்தில் உருவாகும் படங்களில் நிழல்கள் ரவி, லிவிங்ஸ்டன், பாண்டியராஜன், சிவக்குமார், கவுண்டமணி, வடிவேலு, விவேக், கோவை சரளா, குஷ்பு, கனகா, ஊர்வசி, ராதிகா, நாசர் என பலரும் நடித்திருக்கிறார்கள். குடும்ப பிரச்சனைகளை பேசும் வி.சேகரின் படத்தில் காமெடி காட்சிகள் சிறப்பாக இருக்கும்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு சினிமா விழாவில் பேசிய வி.சேகர் ‘முதல் படம் தோல்வி என்பதால் இரண்டாவது படத்தை வெறும் 10 லட்சத்தில் எடுத்தேன். அதுதான் ‘நான் புடிச்ச மாப்பிள்ளை‘. நிழல்கள் ரவியும், ஜனகராஜும் கொடுத்த சம்பளத்தை வாங்கி கொண்டனர். கவுண்டமணி, செந்தில் இருந்தால் வியாபாரத்திற்கு உதவியாக இருக்கும் என நினைத்து கவுண்டமணியிடம் 5 நாட்கள் மட்டும் கால்ஷீட் கேட்டேன். அப்போது அவர் தினமும் ஒரு லட்சம் சம்பளம் வாங்கி வந்தார்.

இதையும் படிங்க: கமல்ஹாசனையே பயப்பட வைத்த கவுண்டமணி!.. வேற ரூட்டில் காயை நகர்த்திய உலக நாயகன்..

அவரிடம் ‘இந்த இயக்குனர் அடுத்த பாக்கியராஜ். இவரை பிடித்துகொள்ளுங்கள். இன்னும் 10 நாள் கால்ஷீட் கொடுங்க. இந்த படம் கண்டிப்பாக 100 நாள் படம். இதை வச்சி நீங்க அடுத்த படத்தில் அதிக சம்பளம் வாங்கிக்கொள்ளலாம்’ என படப்பிடிப்பில் ஒருவர் சொல்ல கவுண்டமணியிடம் சொல்ல அவரும் நம்பிவிட்டார். 5 லட்சம் சம்பளம் வாங்கிக்கொண்டு 20 நாட்கள் நடித்து கொடுத்தார். படமும் ஹிட்’ என வி.சேகர் சொல்லி இருந்தார்.

ஆனால், அவர் சொன்னது போலவே கவுண்டமணிக்கு வி.சேகரை மிகவும் பிடித்து போனது. அதன்பின் அவர் இயக்கிய பல படங்களிலும் கவுண்டமணி தொடர்ந்து நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். இன்னும் சொல்லப்போனால் கவுண்டமணி பல படங்களில் நடித்திருந்தாலும் ‘ஒன்னா இருக்க கத்துக்கணும்’ படத்தில் சாவுக்கு மோளம் அடிப்பவராக அவர் ஏற்ற வேடம்தான் கவுண்டமணிக்கே பிடித்த வேடம் என்பதை அவரே சொல்லி இருக்கிறார்.

இதையும் படிங்க: கவுண்டமணியை ஒதுக்கிய ரஜினி, கமல்!.. கொஞ்சம் அசந்தா இமேஜை காலி பண்ணிடுவாரு!..

google news
Continue Reading

More in Cinema History

To Top