ரஜினியின் நெருங்கிய நண்பருக்கா இந்த நிலைமை? நடிகையின் லீலையால் சிக்கி உயிரிழந்த சம்பவம்

தமிழ் திரையுலகில் 80கள் காலத்தில் மிகப் பிரபலமான நடிகராக இருந்தவர் கராத்தே மணி. சிறுவயதில் இருந்தே கராத்தேவில் அதிக ஆர்வம் உடைய கராத்தே மணி ஜப்பானில் முறையாக கராத்தே பயின்று மிக உயரியப் பட்டமான ரென்சி பட்டத்தை வென்றவர். கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கிய முதல் தமிழர் இவர்தான்.

rajini1

rajini1

கராத்தே மணி நடிகர் ரஜினிக்கு மிகவும் நெருக்கமான நண்பராக இருந்தவர். எவ்வளவுதான் சினிமாவில் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தாலும் ஒருவருக்கு திறமை இருந்தால் மட்டுமே நிலைக்க முடியும். அந்த வகையில் சினிமாவில் ஒரு சிறந்த நடிகர் என்ற அங்கீகாரத்தை கராத்தே மணியாய் பெற முடியவில்லை.

இதையும் படிங்க ; ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை மோகம்! கொலைவெறியில் கமல் பட இயக்குனரை தீர்த்துக்கட்ட நினைத்த பிரபலம்

ரஜினியுடன் ஒன்று இரண்டு படங்களில் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கராத்தே மணிக்கு வந்தது. அதுவும் வில்லன் கதாபாத்திரத்தில் ரஜினிக்கு இணையாக நடித்திருந்தார். அது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதோடு இவர்கள் இருவர் கூட்டணியையும் ரசிகர்கள் இன்னும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் அதோடு நிறுத்திவிட்டார் கராத்தே மணி.

rajini2

rajini2

நடித்தால் ஹீரோவாக நடிப்பேன் என்ற வைராக்கியத்தோடு இருந்த கராத்தே மணிக்கு 80களில் மிகப் பிரபலமான அரங்கேற்ற நடிகையாக இருந்த ஒருவர் மீது காதல் ஏற்பட்டது. இருவரும் ஒன்றாக காதலித்து வந்தனர். ஒரு கட்டத்தில் கராத்தே மணியிடம் இருந்த அத்தனை பணங்களையும் சுருட்டிக்கொண்டு அவரை மோசடி செய்து அந்த நடிகை ஏமாற்றிவிட்டு அமெரிக்காவிற்கு பறந்து விட்டாராம்.

ஒரு நடிகையிடம் தான் ஏமாந்து விட்டோமே என்ற அந்த ஒரு எண்ணத்திலேயே கராத்தே மணி மதுவுக்கு அடிமையாகி மிகத் தீவிர பழக்கத்திற்கு ஆளாகினாராம். அதுவே ஒரு கட்டத்தில் அவருக்கு எமனாக மாறியது. ஒரு நேரத்தில் கராத்தே மணி இறந்துவிட அந்த நடிகை என்ன ஆனார் என்பதே தெரியாமல் இருந்ததாம்.

rajini3

rajini3

2014 ஆம் ஆண்டு அந்த நடிகையை அறிமுகம் செய்த இயக்குனர் இறந்துவிட தனது குருவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக அமெரிக்காவிலிருந்து அப்பொழுதுதான் வந்தாராம் அந்த நடிகை. அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பவும் அமெரிக்காவிற்கே சென்றுவிட்டாராம். கராத்தே மணியை விட்டு எப்போது அமெரிக்காவிற்கு போனாரோ போன உடனேயே அங்கு பக்கத்து வீட்டுக்காரராக இருந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாராம் அந்த நடிகை.

இதையும் படிங்க ; ரூ.1.5 கோடி வரை சம்பளம்!.. சின்னத்திரையில் கெத்துகாட்டும் ‘எதிர்நீச்சல்’ மாரிமுத்து

திருமணத்திற்குப் பிறகு நல்ல முறையில் குடும்பத்தை நடத்தி வந்த அந்த நடிகைக்கு அங்குள்ள ஒரு வங்கியில் பாதுகாப்பு அதிகாரியாக போஸ்ட் கிடைத்ததாம். அதில் பணியாற்றி வந்தாராம். ஓய்வு வயதை எட்டியவுடன் அந்த நடிகை ரிட்டையர்டு ஆக இப்போது வீட்டில் தன்னுடைய 70 வது வயதை கழித்துக் கொண்டிருக்கிறாராம். இந்த சுவாரசிய தகவலை பிரபல திரை விமர்சகர் வித்தகர் சேகர் கூறினார்.

 

Related Articles

Next Story