ஜெயிலர் படம் எனக்குதான் தலைவலி!.. பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரே ரஜினி..

தமிழ் சினிமாவில் பல வருடங்களாகவே சூப்பர் ஸ்டார் இடத்தில் இருப்பவர் நடிகர் ரஜினி காந்த். திரையுலகில் மிகவும் குறைவான தோல்வி படங்களை கொடுத்த ஒரே நடிகர் ரஜினி மட்டுமே. சில படங்கள் சறுக்கினாலும் டக்கென திரையுலகே எதிர்பார்க்காத வகையில் ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துவிடுவார். பாபா படம் சறுக்கிய போது ‘ரஜினி இனிமேல் அவ்வளவுதான்’ என திரையுலகில் பேசினார்கள்.

அப்படத்தின் தோல்வியை சில நடிகர்கள் பார்ட்டி வைத்து கூட கொண்டாடியதாக கூட சொல்லப்பட்டது. ஆனால், சந்திரமுகி என்கிற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து ‘படுத்தா எந்திரிக்காம இருக்கறதுக்கு நான் யானை இல்ல... குதிரை’ என் அதிர வைத்தார். அதன்பின் சிவாஜி, எந்திரன், 2.0 ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.

இதையும் படிங்க: இப்பதான் எனக்கு பணக்காரன் ஃபீலே வந்திருக்கு!.. ஜெயிலர் வெற்றி விழாவில் மனம் திறந்து பேசிய ரஜினி!..

ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 2.0 திரைப்படம் பல நூறு கோடியை வசூல் செய்து சாதனை படைத்தது. அதன்பின் தர்பார், அண்ணாத்த படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை. அதன்பின்னர்தான் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சனுடன் கூட்டணி அமைத்தார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் மகத்தான வெற்றியை பெற்றது. ரஜினியே எதிர்பாத்திராத அளவுக்கு இப்படம் மாஸ் ஹிட் அடித்து ரூ.700 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. இப்படத்தி்ன் வெற்றி மூலம் எப்போதும் நான்தான் சூப்பர் ஸ்டார் என அவரின் இடத்திற்கு போட்டி போட்ட சில நடிகர்களுக்கு ரஜினி காட்டிவிட்டார்.

இப்படம் சூப்பர் ஹிட் அடித்ததால் இப்படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத்துக்கு சொகுசு கார் ஒன்றை பரிசளித்தார். மேலும் அன்பளிப்பாக சில கோடிகளை மூவருக்கும் காசோலையாக கொடுத்தார். அதோடு, சமீபத்தில் இப்படத்தின் வெற்றிக்கு ஒரு பார்ட்டிம் கொடுத்தார்.

இதையும் படிங்க: ஜெயிலர் படம் ஆவரேஜ்தான்!.. அத தூக்கிட்டு போனது அவர்தான்.. அட சூப்பர்ஸ்டாரே சொல்லிட்டாரே!…

இந்த விழாவில் பேசிய ரஜினி ‘ஜெயிலர் படம் சூப்பர் ஹிட் அடித்துவிட்டது. எனவே, நான் அடுத்து நடிக்கும் படங்களையும் அந்த ரேஞ்சுக்கு எதிர்பார்ப்பார்கள். என்ன செய்வதன்றே தெரியவில்லை. இந்த வெற்றியை தாண்ட கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது’ என பேசியிருந்தார்.

ரஜினி கெஸ்ட் ரோலாக நடித்துள்ள லால் சலாம் அடுத்து வெளியாகவுள்ளது. அடுத்து ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் படத்தில் நடிக்கவுள்ளார். அதன்பின் எல்லோரும் எதிர்பார்க்கும் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: லோகேஷ் என் ஆளு தான்!… ரஜினி எனக்கு போட்டி.. ஆனால் இது மட்டும் இல்லை… குஷியான கமல்!

 

Related Articles

Next Story