Rajinikanth: ரஜினிகாந்த் எவ்வளவு அதிகமாக ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு இருக்கிறார். ஒரு காலத்தில் அவரிடம் அத்தனை பிரச்னைகள் இருந்தது. அதனால் அவருக்கு திடீர் உடல்நல கோளாறு ஏற்பட சினிமாவில் இருந்து விலகும் நிலை உருவாகிறது.
வில்லன், குணசித்தர கேரக்டர், ஹீரோ என கோலிவுட்டில் எண்ட்ரி மூன்றே வருடத்தில் தனி நாயகன் அந்தஸ்த்தை பெற்றவர் ரஜினிகாந்த். முள்ளும் மலரும், தப்புத்தாளங்கள் என கதைக்காக அவர் நடித்த படங்கள் ஒரு பக்கம் என்றால் பக்கா கமர்ஷியல் ஹீரோவாக அவர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தர்மயுத்தம்.
இதையும் படிங்க: அதானே திருந்திட்டா எப்படி? அதெல்லாம் நடக்காது… சபரிமலை ட்ரிப்பில் ரஜினி செய்த காமெடி
ஆர்.சி.சக்தி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த இப்படத்தில் ஸ்ரீதேவி, தேங்காய் சீனிவாசன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். படம் அப்போதே மெடிக்கல் துறையில் நடக்கும் ஊழல் குறித்து பேசி இருக்கும். இப்படத்தில் இளையராஜாவின் இசை மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டது.
இதில் பெளர்ணமியன்று ஹீரோவை சங்கிலியில் கட்டி வைத்தால் மட்டுமே அடக்க முடியும் என்ற அமானுஷ்யம் பிரச்னை இருக்கும். இதில் ரஜினி கொஞ்சம் மூர்க்கமாக நடிக்க வேண்டும். ஆனால் அந்த சமயத்தில் தான் அவருக்கு உடல்நல பிரச்னை வந்தது. பெளர்ணமி தினத்தில் அடையாறு ஆலமரத்தில் அவரை கட்டி வைக்க வேண்டும். இந்த காட்சியை எடுக்க படக்குழு தயாராக இருந்தும் ரஜினி வரவே இல்லையாம்.
இதையும் படிங்க: அப்பா ‘அன்பே சிவம்’ படம் ஓடாது!.. துள்ளிக் குதித்த இயக்குனர்!.. சுந்தர்.சி சொன்ன சோகக்கதை!..
அந்த சமயத்தில் தான் அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார். மீண்டு வருவாரா என தயாரிப்பாளர் ஜாக்பாட் சீனிவாசன் கவலையில் இருந்தாராம். இருந்தும், அதில் இருந்து மீண்டும் அவர் ஷூட்டிங்கில் கலந்துக்கொள்ள வரும் போது அவரின் டீடேக் வாங்கவே இயக்குனர் பயந்தாராம். ஒரு சண்டை காட்சியில் ரீ டேக்கை கூட படத்தின் வசனகர்த்தாவான பீட்டர் செல்வக்குமார் தயங்கியப்படி கேட்டே ஓகே வாங்கினாராம்.
அவரால் முடிந்த வரை மட்டுமே ரஜினி நடித்து கொடுத்தாராம். அவர் நன்றாக இருந்து இருந்தால் இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம் என படக்குழு கவலைக்கொள்ள ரஜினிக்கும் அந்த வருத்தம் இருந்ததாம். இத்தனை போராட்டங்களை தாண்டி ரிலீஸான அப்படம் மிகப்பெரிய ஹிட்டை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…