Connect with us
rajinikanth

Cinema History

ரஜினி முதன்முதலாக அதிக சம்பளம் வாங்கிய திரைப்படம் எது தெரியுமா?… இத வாங்குறதுக்கு மனுஷன் பட்ட பாடு இருக்கே….

ரஜினி தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர். இவர் தமிழ் சினிமாவில் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின் மூன்று முடிச்சு, கவிக்குயில், 16 வயதினிலே போன்ற பல திரைப்படங்களின் மூலம் மக்களிடையே பிரபலமானார்.

இவர் நடித்த மூன்று முடிச்சு திரைப்படத்தின் மூலம் இவருக்கு பல பெண் ரசிகர்களும் கிடைத்தனர். இவரது ஸ்டைலுகென்றே பல ரசிகர் பட்டாளமே அந்த காலத்திலிருந்து இந்த காலம்வரையில் உள்ளனர். இவர் தனது கடின உழைப்பால்தான் சினிமாவில் நுழைந்தார்.

இதையும் வாசிங்க:இசைஞானி கூட அத செய்யலையே!.. முதல் படத்திலேயே தரமான சம்பவம் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்

இவரது நெருங்கிய நண்பர்தான் சினிமா போட்டோகிராஃபரான சிம்மி ஆனந்த். இவர் இயக்குனர் பி.மாதவனுக்கும் நெருங்கியவர். இவர் ஒருமுறை ரஜினியை மாதவனின் அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது மாதவன் ரஜினியிடம் அவரை பற்றி கேட்டுள்ளார்.

அப்போது ரஜினியும் தான் பாலசந்தரின் இயக்கத்தில் படங்களில் நடித்துள்ளதாகவும் மூன்று முடிச்சு எனும் படத்தில் நடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பின் ரஜினியை நடித்து காட்டுமாறு கேட்டுள்ளார். ரஜினியும் தன்னுடைய ஸ்டைலான நடிப்பினை அவர் முன் நடித்து காட்டியுள்ளார். பின் ரஜினியை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார் இயக்குனர் பி. மாதவன்.

இதையும் வாசிங்க:என்னிடம் ரஜினி வாய் விட்டு கேட்டது இது ஒன்னை தான்.. வைரமுத்து சொன்ன சுவாரஸ்ய தகவல்..!

அப்போது வெளியே ரஜினியை அழைத்து வந்த சிம்மி ஆனந்த் நின்றுள்ளார். அவரிடம் சொல்லி அனுப்புவதாக இயக்குனர் கூறியுள்ள தகவலை ரஜினி கூறுகிறார். பின் ரஜினி அங்கிருந்து சென்றுவிட்டார். அதன்பின் இயக்குனர் சிம்மி ஆனந்தை அறைக்குள் அழைத்துள்ளார். அப்போது அவரிடம் ரஜினியின் நடிப்பு எனக்கு திருப்தி இல்லை எனவும் அதனால் அவரை அனுப்பிவிட்டதாக கூறியுள்ளார். பின் சிம்மி ஆனந்த் அவரது மூன்று முடிச்சு திரைப்படத்தினை பற்றி இயக்குனரிடம் கூறியுள்ளார்.

அதை கேட்ட இயக்குனரும் மறு வாரம் அவரை வர சொல்லி ஆனந்திடம் கூறியுள்ளார். பின் மறுவாரம் ரஜினி வந்துள்ளார். அவரிடம் இயக்குனர் அவர் எடுக்கவுள்ள திரைப்படத்தில் மூன்று கதாநாயகர்கள் எனவும் விஜயகுமார்தான் முதன்மை கதாபாத்திரம் எனவும் கூறியுள்ளார். ரஜினியும் சம்மதித்துள்ளார். அப்படி வெளியான திரைப்படம்தான் சங்கர் சலீம் சைமன் திரைப்படம். இப்படத்தில் ரஜினிக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 5000 ரூபாயாம். இதுவே ரஜினி தனது சினிமாவில் முதல் முதலில் வாங்கிய பெரிய தொகையாம். இப்படத்தில் நடித்த ரஜினிக்கு பின் பைரவி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாம்.

இதையும் வாசிங்க:இதென்ன லிப் லாக்? சிம்புவும் த்ரிஷாவும் அந்த சீனில் பண்ணிய அட்டகாசம் இருக்கே? உணர்ச்சிவசப்பட்டு என்னாச்சு தெரியுமா?

google news
Continue Reading

More in Cinema History

To Top