Connect with us

Cinema News

அட! என்னமா அவரு சிம்பிள்ளா இருந்தா சீனை போடுவீங்களா..? ரஜினிக்கு நடந்த அவமரியாதை..!

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் எப்பையுமே ரொம்ப சிம்பிள்ளான ஆளாக தான் பொதுவெளியில் தன்னை காட்டிக்கொள்வார். அப்படி ஒருமுறை அவர் கோயிலில் உட்கார்ந்து இருக்க அதிர்ச்சியாகும் ஒரு சம்பவமே நடந்து விட்டதாம். 

தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எப்பையுமே கோலிவுட்டில் ஹிட் ஸ்டாராக வலம் வருகிறார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் வசூல் கல்லா கட்டியது. இந்த வயதிலும் எப்படி இவ்வளோ ஸ்டைலாக இருக்கிறார். 

இதையும் படிங்க: சிறகடிக்க ஆசை: ஓசியில காசு கொடுத்து கடைசியில பிச்சைக்காரனா மாறிய மனோஜ்..!

இளம் கதாநாயகர்களுக்கே டஃப் கொடுக்கும் வயதில் ரஜினிகாந்தும் போட்டி போட்டு நடித்து கொண்டு இருக்கிறார். ஆனால் பொதுவெளியில் ரஜினியை பார்த்தால் காஸ்லியான ட்ரஸ் இல்லாமல் சிம்பிளான உடையில் சாதாரணமாகவே இருப்பார். இதை பார்க்கும் பலருக்குமே சூப்பர்ஸ்டாரே இப்டி இருக்காரே என ஆச்சரியப்படும் அளவுக்கு இருப்பார்.

அதே வேளையில், ஆன்மீகத்தில் ஆர்வமாக இருக்கும் ரஜினிகாந்த். அடிக்கடி கோயில் போவதை வழக்கமாக வைத்து இருப்பார். அப்படி ஒரு முறை கோயில் போய் விட்டு ஒரு தூண் அருகில் அமர்ந்து அமைதியாக உட்கார்ந்து இருந்தார். உடையும் ரொம்பவே சாதாரணமாக இருந்தது.

அவர் உட்கார்ந்து இருந்ததை பார்த்து பிச்சைக்காரன் என நினைத்த பெண்மணி அவருக்கு 10 ரூபாயை கொடுக்கிறார். ரஜினியும் சிரித்துக் கொண்டே வாங்கி கொள்கிறார்.  அந்த பெண்மணியும் வாங்கி கொண்டு நகர்ந்து விடுகிறார். அங்கையே ரஜினி அமர்ந்து இருந்தார்.

இதையும் படிங்க: பாடல்களே இல்லாமல் சிவாஜி நடித்த ஒரே திரைப்படம்!.. விருதுகளை குவித்த மிஸ்ட்ரி திரில்லர்!..

சற்று நேரத்தில் உத்துப் பார்த்த அந்த பெண்ணுக்கு அது ரஜினி என தெரிந்து விடுகிறது. அவர் செய்த தப்பை உணர்ந்த பெண் உடனே அவர் அருகில் ஓடிகிறார். அதே நேரத்தில் ரஜினியும் தன் காருக்கு எழுந்து செல்கிறார். சாரி சார் என அந்த பெண் தப்பு பண்ணிவிட்டேன் என மன்னிப்பு கேட்கிறார். ஆனால் ரஜினியோ சிரித்துக் கொண்டே அந்த இடத்தினை விட்டு சென்று விடுகிறாராம். இதுவே வேறு நடிகராக இருந்து இருந்தால் அந்த இடத்தில் பிரச்னையே வெடித்து இருக்கும் என தகவல்கள் கிசுகிசுக்கின்றது.

google news
Continue Reading

More in Cinema News

To Top