Connect with us

Cinema History

குருவிடமே சீன் போட்ட ரஜினிகாந்த்.. ஆனா இந்த பிரபலத்துக்கு மட்டும் இதை செய்தாராம்..!

Rajinikanth: ரஜினிகாந்துக்கு பொதுவாகவே ஒரு பழக்கம் இருந்தது. அதாவது அவரை ஒரு சினிமா நிகழ்ச்சிக்கு அழைத்தால் அவ்வளவு எளிதில் வர மாட்டார். அதனால் அவரை அழைக்க வருபவர்கள் கூட இவர் வருவாரா இல்லையா என்பது கூட தெரியாது.

சிலரிடமோ என் பெயரை பத்திரிக்கையில் போடாதீங்க என்பதையும் கறாராக அவர் தரப்பில் இருந்து சொல்லப்பட்டு விடுமாம். அந்த பத்திரிக்கையை நம்பி கூட்டம் கூடி கடைசியில் அவர் வரமுடியவில்லை என்றால் அது நன்றாக இருக்காது என்பதற்கு தான். இதை தன்னுடைய நெருக்கமான பிரபலங்களிடமே சொல்லி விடுவாராம்.

இதையும் படிங்க: வாரிசு vs துணிவு போட்டியில் யார் ஜெயிச்சது தெரியுமா? சொன்னா நம்ப மாட்டிங்க..!

ஒருமுறை திரையுலகம் சேர்ந்து பாலசந்தருக்கு வெற்றிவிழா நடத்தியது. அதற்கு ரஜினிகாந்துக்கும் அழைப்பு விடுக்கப்பட கேட்ட போது இதே பதில் தான். நான் வரேன். ஆனால் என் பெயரை வைத்து விளம்பரம் செய்ய வேண்டாம் எனக் கூறி இருக்கிறார். அதில் இருந்த இயக்குனர்களுக்கு அதிர்ச்சி.

இவர் வருவாரா இல்லையா என்பது நிகழ்ச்சி தொடங்கும் நிமிடம் வரை அவர்களுக்கு இருந்ததாம். ஆனால் சொல்லியபடி வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சென்ற நிகழ்வு நடந்ததாம். ஆனால் ஒரே ஒரு பிரபலத்திடம் மட்டும் என் பெயரினை போட்டே பத்திரிக்கை அடியுங்கள். விளம்பரங்கள் கூட செய்து கொள்ளுங்கள் என்றாராம். அது வேறு யாருமில்லை இசையமைப்பாளர் தேவா தானாம்.

இதையும் படிங்க: தளபதி69க்கு விஜய் வைத்திருக்கும் ஐடியா இதுதான்… வேற இயக்குனருக்கு வாய்ப்பே இல்ல!

அதை தொடர்ந்து சொல்லியபடியே நிகழ்ச்சிக்கு வந்து சில மணிநேரம் இருந்து சிறப்பித்துவிட்டே சென்றாராம். அத்தகைய உறவு இருவருக்கும் இருப்பதாக நடிகர் சித்ரா லட்சுமணன் வா வரலாம் வா பட விழாவில் கலந்து கொண்ட போது சொல்லி இருந்தார். தற்போது இந்த தகவல் வைரலாக தொடங்கி இருக்கிறது.

google news
Continue Reading

More in Cinema History

To Top