Rajkiran: நடிகர் ராஜ்கிரண் தன்னுடைய பேச்சுத் திறமையால் எம்ஜிஆர் வைத்து சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்த இயக்குனருக்கே அறிவுரை சொன்ன சுவாரசிய சம்பவம் கோலிவுட்டில் நடந்திருக்கிறது.
1976 ல் வெளிவந்த சூப்பர் ஹிட் படம் பத்ரகாளி.இப்படத்தில் சிவகுமார், ராணி சந்திரா ஆகியோர் நடித்திருந்தனர். இளையராஜா இசையில் “கண்ணன் ஒரு கைக் குழந்தை”, “வாங்கோன்னா..” என பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட்டாக அமைந்தது.
இதையும் படிங்க: கேப்டனால் அறிமுகமான இயக்குனர்!.. ஓபனிங் மாஸாக இருந்தும் பிக்அப் ஆகாமல் போன காரணம் என்ன?..
இந்நிலையில் ராஜ்கிரண் ஏற்கனவே பத்ரகாளி படத்தின் கதையை நாவலாக படித்து இருக்கிறாராம். ஒரு குறிப்பிட்ட காட்சியில் மட்டும் திரைக்கதையை வேறு மாதிரி செய்தால் படம் சூப்பர்ஹிட் அடிக்குமே என ராஜ்கிரணுக்கு ஆசை வந்து இருக்கிறது. ஆனால் இந்தத் திருத்தத்தை எப்படி ஏ.சி. திருலோகசந்தரிடம் சொல்ல முடியும்.
எம்ஜிஆர் நடிப்பில் ‘அன்பே வா’, சிவாஜி நடிப்பில் ‘தெய்வ மகன்’, ‘பாரத விலாஸ்’ என சூப்பர் டூப்பர் ஹிட்களை கொடுத்தவர். அவரிடம் போய் ஒரு விநியோகிஸ்தர் திருத்தம் சொன்னால் ஏற்றுக்கொள்வாரா? சொல்லவில்லை என்றால் படத்தின் வசூல் அடிப்படுமே எனக் குழப்பத்தில் இருந்து இருக்கிறார்.
இதையும் படிங்க: இந்த பாட்டுல நான் நடிக்க மாட்டேன்!. அடம்பிடித்த எம்.ஜி.ஆர்.. பின்னாடி அவர் படம்னாலே அதுதான்!..
இருந்தும் ஒரு தைரியத்தில் ஏ.சி.திருலோக்சந்தரை ராஜ்கிரண் சந்திக்கிறார். அவரும் இவரிடம் சொல்லுங்க எனக் கேட்க எப்படி ஆரம்பிப்பது எனத் தெரியவே இல்லையாம். முதலில் அவரை கோபப்படுத்தக்கூடாது என முடிவெடுத்தவர். ஒரு ஐடியாவை பிடிக்கிறார்.
சார் நீங்க இயக்கிய இருமலர்கள் படம் ரொம்ப நல்லா இருந்தது. எனக்கு ரொம்ப பிடிச்ச படம் அது. இதை கேட்ட திருலோக்சந்தர் முகம் சட்டென மலர்ந்ததாம். அதை பயன்படுத்திக்கொண்ட ராஜ்கிரண் பத்ரகாளி படத்தில் இருக்கும் பிரச்னையை கூறிவிடுகிறார். கோபமாக மாறிவிடுவாரோ என பயப்பட அவர் நானும் நினைச்சேன் என்றாராம்.
அந்த காட்சியை நீங்க சொன்ன மாதிரி மாற்றினால் தான் இருக்கும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். சரியா சொல்லிட்டீங்க. உங்களை பார்க்கும் போது சாதாரணமாக தெரிந்தது. பின்னாளில் நீங்க பெரிய ஆளா வருவீங்க எனப் பாராட்டுயும் விட்டாராம். அந்த படம் பின்னர் குறிப்பிட்ட மாற்றத்துடன் வெளியாகி சூப்பர்ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கமல் அப்படி செய்வாருன்னு யாருமே எதிர்பார்க்கல!… கௌதம் மேனன் என்ன சொல்றார் பாருங்க!..
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…