Connect with us

Cinema History

ரியல் லைஃப் ரோமியோ-ஜூலியட்… லவ்வில் பிணைந்த ஐஸ்வர்யா-சல்மான்கான்… ப்ரேக்அப் எப்படி ஆச்சு தெரியுமா?

சினிமா பிரபலங்கள் காதலுக்கு பெரிய ஆயுள் கிடையாது. கொஞ்ச நாள் வெளியில் சுற்றி விட்டு திடீரென ப்ரேக் அப் செய்துகொண்டு வேறு வேறு பக்கம் போய் விடுவார்கள். அப்படி இருக்கும் சில நட்சத்திர ஜோடிகளின் ப்ரேக் அப் ரசிகர்களின் மனதினையே ஃபீல் பண்ண வைத்து விடும். அப்படி ஒரு ஜோடி தான் பாலிவுட் நடிகர் சல்மான்கான் – ஐஸ்வர்யா ராய் காதல்.

சல்மான்கான் – ஐஸ்வர்யா ராயின் காதல் சொல்லப்படாமலே பாலிவுட்டிற்கே தெரிகிறது. பெங்களூரில் இருந்து எந்தவித பின்புலனும் இல்லாமல் நடிக்க வந்த ஐஸ்ஸுக்கு துணையாக நின்றவர் சல்மான் தான். தப்பானவர்களை அவருடன் நெருங்க விடாமல் பார்த்து கொள்கிறார். தேவையில்லாதவர்களை துரத்தி விடுகிறார்.

இதையும் படிங்க: ரஜினியை சாதாரணமா நினைச்சிட்டு இருக்காங்க! அவர் வாய்முகூர்த்தம் – இப்ப வரைக்கும் நடக்குது – நெகிழ்ச்சியில் தேவா

இதனால் சல்மானை மீறி ஐஸ்வர்யாவிற்கு எந்த பிரச்னையும் இல்லாமல் தைரியமாக நடித்து வருகிறார். இருவருக்கும் ஒருவரை அறியாமல் காதல் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த விஷயம் மீடியாவில் கசியத் தொடங்கியது. இதனால் ஐஸுக்கு கோபம் அதிகமாகி சல்மானுடன் சண்டைக்கு போகிறார்.

இதைக்கேட்ட சல்மான், மீடியாக்காரர்களுக்கு இது தெரியாமலா இருக்கும். நான் செய்யவில்லை. இப்படி ஊடலும், கூடலும் இருக்க அவர்கள் காதல் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் இருவரும் சினிமாவில் பிஸியாக நடித்து வருகின்றனர்.

அதிலும் ஐஸ்வர்யாவிற்கு பல மொழிகளில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் திருமணம் செய்யலாம் என சல்மான் ஐஸ்வர்யாவிடம் கோரிக்கை வைக்கிறார். ஆனால் ஐஸ்வர்யா காதலை பிடிக்காத சிலர் இப்போது திருமணம் செய்ய வேண்டாம் என தவறாக அட்வைஸ் செய்கிறார்கள்.

இதையும் படிங்க: ரஜினி, கமலை இந்நேரம் பந்தாடியிருப்பாரு! குடியையும் தாண்டி கேப்டன் வாழ்க்கையை சீரழித்த அந்த விஷயம்

பவர்புல்லாக இருக்கும் நேரத்தில் திருமணம் செய்தாலே கேரியர் போய் விடும் என ஐஸ்வர்யா மனதினை கெடுக்கிறார்கள். சல்மான் ஒரு பக்கம் திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்துகிறார். ஒரு கட்டத்தில் சல்மானை ஒதுக்குகிறார். இதில் கடுப்பான சல்மான், ஐஸ்வர்யா தங்கி இருந்த அப்பார்மெண்ட்டில் நேரில் போய் சண்டைக்கு நின்று இருக்கிறார். அப்போது தான் இவர்கள் காதல் வெட்ட வெளிச்சமாகிறது.

அதை தொடர்ந்து தப்பான ஆட்களின் பேச்சினை கேட்டு ஐஸ்வர்யா சல்மானை குறித்து அவதூறாக பேட்டி கொடுக்கிறார். இது சல்மானை மேலும் எரிச்சலாகிறது. ஐஸ் மீது இருந்த கோபத்தில் அமெரிக்கா சென்று திரும்பியவரிடம் இதுகுறித்து பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பிய பின்னரே தன்னால் யாரையும் துன்புறுத்த முடியாது என ஓபனாகவே சொல்லுகிறார். அதனை தொடர்ந்து இவர்கள் காதலும் முறிந்தது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top